தோழி,
பாகனைக் கண்டு மீளல்.
102. |
மழுகிரு
ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன் |
|
ஒழுகிய
மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே |
|
கழுதுரு
வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் (டாள் |
|
தொழுகிய
வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண் |
(இ-ள்.) இருள் மழுகு இரவின்
- இருளினால் ஒளி மழுங்கிக் கிடக்கிற இராக்காலத்தில், வைகி - தங்கியிருந்து,
மாளவ பசஞ்மத் தேன் மாளவபஞ்சமம் என்னும் பண்ணாகிய தேன், ஒழுகிய -ஒழுகுவதற்குக்
காரண மாயிருந்த, மிடற்று -கண்டத்தையுடைய, ஒர்காளை உள்ளவன் - ஒப்பற்ற காளைபோன்று
இருப்பவன், யாவன் என்று -எவன்? என்று, நாடி - தேடி, கழுது உரு அவனை- பேயினது வடிவம்
போன்ற அட்டபங்கனை, கண்டனள் - (குணவதி) பார்த்தாள்; கண்டு - பார்த்தவுடன்,
தையற்கு- அமிர்தமதிக்கு, காமத்து ஒழுகிய உள்ளம் - கள்ளக் காமத்தின்பாற் சென்ற
மனம், ஒழியும் - நீங்கும், என்று, உவந்து மீண்டாள் - மகிழ்ந்து திரும்பினாள்;(எ-று.)
தோழி, பண்
ஒழுகிய காளை எவனென நாடி, பேய் போன்ற அட்டபங்கனைக் கண்டு, இவனுருவத்தின் இயல்-
பைக் கூறின் அப்பொழுதே அரசியின் காதல் மாறிவிடும் என்று மகிழ்ந்து மீண்டாள் என்க.
ஓர், அசையெனினுமாம். ‘கழுதுருவவனைக்‘ கண்டதும், தன் தலைவியின் தீய செயலும்
அதற்குத்தான் உடனின்று கூட்டுவித்தலும் ஒழியு மென்ற எண்ணத்தால், உவந்தா ளென்க.
மழுகுஇருள் - மங்கிய இருள் என்னலாம்.
‘இரா‘ என்னுஞ் சொல், இரவு என்றாயிற்று. (30)
(மூன்று
கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்
103. |
மன்னன்மா
தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத் |
|
தன்னவ
னத்தி பாக னட்டமா பங்க னென்பான் (டேன் |
|
றன்னைமெய்
தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண் |
|
என்னைநீ
முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள்.. |
|