(இ-ள்.) ‘மன்னன் மாதேவி -
கோப்பெருந்தேவியே, நின்னை வருத்துவான் - உன்னைத் துன்புறுத்துவதற்காக, வகுத்த கீதத்து
அன்னவன் - அமைத்துப் பாடிய இசையினையுடைய அவன், அத்தி பாகன் - நம் யானைப்பாகனாகிய,
அட்டபங்கள் என்பான் - அஷ்டபங்க னென்பவன்; தன்னை -அவனை, மெய் தெரியக்கண்டு
- உடல்முழுவதும் விளங்கப்பார்த்து, தளர்ந்து - உளம் சோர்ந்து, கண் புதைத்து மீண்டேன்
- (அவனைக் கண்ட) என் கண்களைக் கைகளால் பொத்திக்கொண்டு திரும்பிவிட்டேன்;
என்னை நீ முனிதி என்றிட்டு - என்னை நீ வெறுப்பா யென்று உட்கொண்டு, அவற்கு -அப்
பாகனுக்கு, ஈது- (யான்சென்ற) இவ் விஷயத்தை, இசைக்கலன் - சொல்லாதொழிந்தேன்‘
என்றாள் - என்று குணவதி கூறினாள்; (எ-று.)
‘தேவியே,
அஷ்டபங்கனைக் கண்டேன். அவனுருவினை நீ காண்பாயாயின் உடனே நீ வெறுத்து நீக்குவாய்.
அத்தன்மையோனுக்கு நின் கருத்தினைத் தெரிவிப்பின் நீ என்னை முனிவா யென் றஞ்சி
ஒன்றும் உரையாடாது திரும்பினேன் என்றா ளென்க.
தெரிதல் - ஆராய்தல். முனிதல் - சினத்தலுமாம்.‘
என்றிட்டு, இடு; துணைவினை அட்டமா பங்கன்; மா, அசை. அட்டபங்கன் - அஷ்டபங்கன்.
அஷ்ட பங்கம் -எண்வகைக்குறைவு. அவை இன்னவை யென்பது அடுத்த செய்யுளிற் கூறப்படும்.
(31)
104. |
நரம்புகள் விசித்த மெய்ய னடையினில்1
கழுதை நைந்தே |
|
திரங்கிய விரலன் கையன் சிறுமுகன்
சினவு சீரிற்2 |
|
குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக்
கழிந்த கண்ணன் |
|
நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள
சிலபல் லென்றாள். |
(இ-ள்.)
‘(அவன்), நரம்புகள் விசித்த மெய்யன் - முடிகளாகக் கட்டிக்கொண்டுள்ள நரம்புகளோடு
கூடிய உடலை யுடையோன்; நடையினில் கழுதை -கழுதைநடைபோன்ற
|