திருவைப்
போன்ற தேவியையும், நாயைப் போன்ற பாகனையும் ஒருசேர மனத்தால் நோக்கி, அவர்தம்
கூட்டுறவுக்குக் தோழி வருந்தினா ளென்க.
ஈண்டு ‘ஆவி செல்கின்ற வெந்நோய'; என்றது
தொழு நோயை ‘குட்டமாகிய மேனி'; (209)
என்பர் முன்னரும். பூவின்; இன், தவிர்வழிச் சாரியை.
(36)
இக்
காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின்
வாயிலாகக் கூறுகின்றார்.
109. |
ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க
னாருங்1
|
|
கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந்
துயர்தற் காகப |
|
பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே
[றாள். |
|
தோடலார் குழலிதோழி துணிந்தனள்
பெயர்த்துச் சென் . |
(இ-ள்.) ‘ஆடவர் அன்றி - ஆண்மக்களேயல்லாமல், மேலார்
அணங்கனாரும்-மேன்மை வாய்ந்த மகளிரும், அருவருத்து-இவளால்உலகவாழ்க்கையில் வெறுப்புற்று,
கூடலர் - (இல்வாழ்க்கையில்) சேராதவர்களாகி, துறந்து-றவுபூண்டு,
நோன்மைக்
குணம் புரிந்து-தவத்தோர்தன்மையை மேற்கொண்டு, உயர்தற்காக -நற்பேறு பெறுதற்காக,
பீடுஉடை அயனார்-பெருமை பொருந்திய பிரமதேவன்,
தந்த-படைத்த,
பெருமகள் இவள் - பெருமாட்டி யாவாள் இவள், என்று --, தோடு அலர் குழலிதோழி-இதழ்விரிந்த
பூவினைச் சூடிய குழலாளாகிய தோழி, உள்ளே துணிந்தனள் - மனம் துணிந்தவளாகி, பெயர்த்து
- மறுபடியும், சென்றாள் - (அட்டபங்களிடம்) சென்றாள்; (எ-று.)
“உலகிலுள்ள ஆண் பெண் ஆகிய இருபாலரும் உலகவாழ்க்கையை வெறுத்துத் துறத்தல்
வேண்டும் என்ற நோக்கத்துடனே இவ் வரசியைப் பிரமன் படைத் திருக்க வேண்டும்” என்ற
தோழி நினைத்துக்கொண்டு,மீண்டும் அப் பாகனிடம் சென்றா ளென்க
|