- 157 -

திருவைப் போன்ற தேவியையும்,  நாயைப் போன்ற பாகனையும் ஒருசேர மனத்தால் நோக்கி,  அவர்தம் கூட்டுறவுக்குக் தோழி வருந்தினா ளென்க.

ஈண்டு ‘ஆவி செல்கின்ற வெந்நோய';  என்றது தொழு நோயை ‘குட்டமாகிய மேனி'; (209) என்பர் முன்னரும். பூவின்; இன், தவிர்வழிச்  சாரியை.                    (36)

இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின்

வாயிலாகக் கூறுகின்றார்.

109. ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங்1
  கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந்  துயர்தற் காகப
  பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே  [றாள்.
  தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென் .

   (இ-ள்.) ‘ஆடவர் அன்றி - ஆண்மக்களேயல்லாமல், மேலார் அணங்கனாரும்-மேன்மை வாய்ந்த மகளிரும்,  அருவருத்து-இவளால்உலகவாழ்க்கையில் வெறுப்புற்று,  கூடலர் - (இல்வாழ்க்கையில்) சேராதவர்களாகி, துறந்து-றவுபூண்டு,

நோன்மைக் குணம் புரிந்து-தவத்தோர்தன்மையை மேற்கொண்டு, உயர்தற்காக -நற்பேறு பெறுதற்காக,  பீடுஉடை அயனார்-பெருமை பொருந்திய பிரமதேவன்,

தந்த-படைத்த, பெருமகள் இவள் - பெருமாட்டி யாவாள் இவள், என்று --, தோடு அலர் குழலிதோழி-இதழ்விரிந்த பூவினைச் சூடிய குழலாளாகிய தோழி, உள்ளே துணிந்தனள் - மனம் துணிந்தவளாகி, பெயர்த்து - மறுபடியும், சென்றாள் - (அட்டபங்களிடம்) சென்றாள்; (எ-று.)

“உலகிலுள்ள ஆண் பெண் ஆகிய இருபாலரும்  உலகவாழ்க்கையை வெறுத்துத் துறத்தல் வேண்டும் என்ற நோக்கத்துடனே இவ் வரசியைப் பிரமன் படைத் திருக்க வேண்டும்” என்ற தோழி நினைத்துக்கொண்டு,மீண்டும் அப் பாகனிடம் சென்றா ளென்க

 

1 அணங்கனாரைக்.