- 156 -

“பாகனிடம் ஆர்வம் சென்ற  காரணத்தை ஆராய வேண்டா;  இனி அவனைக் கூடும்படி செய்க”  என்று ஏவினா ளென்க.

ஒரு காரியத்தைத் தொடங்குவோர்  தொடங்கு வதற்குமுன்னரே அதன் காரணங்களையும்  முடிபையும் பயன் முதலியவற்றையும் ஆராயவேண்டும்;  அங்ஙனமன்றி அக் காரியம் முடிந்தபின் ஆராய்தல் வேண்டுவதின்மை -யின் ‘ காரியமன்று‘ என்றாள்.  இங்குக் காரியம், தன் மனோவாஞ்சையை அஷ்டபங்கன் பெறுதல் - காரணம், அவனிடம் இருக்க வேண்டிய திரு,  திறல் முதலியன.

கருதிடு;  இடு,  துணிவுப் பொருள் உணர்த்துந் துணைவினை.     (35)

                            தோழியின் அச்சம

108. தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான்
  ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை  ஞமலி யாகும்
  பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ
  நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள். (ன்னா

(இ-ள்.) தேவி - கோப்பெருந்தேவியே, நீ கமலை ஆவாய் - நீ மலர்மகளாவாய்; திருஉளத்து  அருளப்பட்டான்-நினது சிறந்த உள்ளத்தால் காதலித்தருளப்பட்டவன், ஆவி செல்கின்ற வெந்நோய் - இறக்குந்தறுவாயி லுள்ள கொடிய தொழுநோயாற் பற்றப்பட்ட, அரு நவை ஞமலி ஆகும்  - மிக்க குற்றமுடைய நாயாவான்;  இதனை - இத்தகைய கூட்டுறவை, பூவின் வார் கணையன் - பூவாகிய நெடிய கணையையுடைய மன்மதன், புணர்த்த ஆறு- சேர்த்துவைத்த விதம்,  என்னே -வியக்கத்தக்கது” என்னா -என்று, உளைந்து - மனம்வருந்தி, நாவினால் கூறி - வாயினாற் சொல்லி, நடுங்குபு நடுங்கி நின்றாள் - (தோழி) நடு நடுங்கி நின்றாள்; (எ-று.)