“பாகனிடம் ஆர்வம்
சென்ற காரணத்தை ஆராய வேண்டா; இனி அவனைக் கூடும்படி செய்க” என்று ஏவினா ளென்க.
ஒரு காரியத்தைத் தொடங்குவோர்
தொடங்கு வதற்குமுன்னரே அதன் காரணங்களையும் முடிபையும் பயன் முதலியவற்றையும் ஆராயவேண்டும்;
அங்ஙனமன்றி அக் காரியம் முடிந்தபின் ஆராய்தல் வேண்டுவதின்மை -யின் ‘ காரியமன்று‘
என்றாள். இங்குக் காரியம், தன் மனோவாஞ்சையை அஷ்டபங்கன் பெறுதல் - காரணம்,
அவனிடம் இருக்க வேண்டிய திரு, திறல் முதலியன.
கருதிடு; இடு, துணிவுப் பொருள் உணர்த்துந் துணைவினை.
(35)
தோழியின்
அச்சம
108. |
தேவிநீ கமலை யாவாய் திருவுளத்
தருளப் பட்டான் |
|
ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை
ஞமலி யாகும் |
|
பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா
றிதனையெ |
|
நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி
நின்றாள். (ன்னா |
(இ-ள்.)
தேவி - கோப்பெருந்தேவியே, நீ கமலை ஆவாய் - நீ மலர்மகளாவாய்; திருஉளத்து அருளப்பட்டான்-நினது
சிறந்த உள்ளத்தால் காதலித்தருளப்பட்டவன், ஆவி செல்கின்ற வெந்நோய் - இறக்குந்தறுவாயி
லுள்ள கொடிய தொழுநோயாற் பற்றப்பட்ட, அரு நவை ஞமலி ஆகும் - மிக்க குற்றமுடைய
நாயாவான்; இதனை - இத்தகைய கூட்டுறவை, பூவின் வார் கணையன் - பூவாகிய நெடிய கணையையுடைய
மன்மதன், புணர்த்த ஆறு- சேர்த்துவைத்த விதம், என்னே -வியக்கத்தக்கது” என்னா
-என்று, உளைந்து - மனம்வருந்தி, நாவினால் கூறி - வாயினாற் சொல்லி, நடுங்குபு நடுங்கி
நின்றாள் - (தோழி) நடு நடுங்கி நின்றாள்; (எ-று.)
|