அரசி
தோழியை நோக்கி ‘திரு முதல் குலம் ஈறாகக் கூறப்பட்ட இவற்றின் பயன் மகளிருள்ளத்தை
வயப்படுத்துத லன்றோ? என் நெஞ்சை அவன் தன் இசையினால் கவர்ந்துவிட்டான். அவனிடத்தில்
இவை இல்லாதிருப்பதனால் குறை யென்ன?'; என்றான்.
மகளிர்மனம், ‘செல்வம்... குலம'; இவற்றைப்
பெற்றவனிடமே சென்று சேர்தல் இயல்பு. ஆயினும், அவற்றுள் ஒன்றும் இல்லாத அஷ்டபங்கன்பால்
அமிர்த மதியின் ஆர்வம் அணுகிச் செறிந்தது என்றால், அது பழ- வினைப்பயனே யாகும்.
‘ இவற்றினால'; என்றது
’பூதிகந்தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா, சாதியுந் தக்க தன்றால்‘
(யசோ 105.) என்ற குற்றங்களையும் சுட்டும். ‘அவன்கண்'; என்றது,
செல்வம் முதலிய இவ் வாறையும் பெற்றிலாத அவனிடத்து என்றும் பொருள்படும். பயன்,
நெஞ்சம் இவற்றிலுள்ள உம்மை இரண்டும் இசைநிறை. (34)
107. |
காரியம் முடிந்த பின்னுங் காரண
முடிவு காணல் |
|
காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட்
காமன் |
|
ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய
னாக் |
|
நேரிழை நினைந்து போகி நீடலை
முடியி தென்றாள். |
(இ-ள்.) ‘நேர்இழை-அழகான ஆபரணங்களைஅணிந்தவளே,
காரியம் முடிந்த பின்னும் - தொழிற்பயன் முடிவெய்திய பின்னரும், காரணம் முடிவு காணல்
இது - காரணத்தின் முடியை ஆராயப்புகுதலாகிய இது, காரியம் அன்று என்று - செய்யத் தகுவதன்று
என்று, கருதிடு -கருதுவாயாக; கடவுள் காமன் - காமனாகிய கடவுள், நமக்கு ஆர்உழை அருளைச்
செய்யும் - எவன்பால் நமக்கு அருள்புரிகின்றானோ, அவன் அனையன் ஆக நினைந்து -அவனையே
அக் காமக்கடவுளாக நினைந்து, நீடலை போகி - தாமதமின்றிச் சென்று, இது முடி என்றாள்
- இதனை முடித்துவை‘ என்றாள். (எ-று.)
|