பகைவர்பால் முனிந்து செய்யும் செயலையுடைய அரசன் எனினுமாம். இனி, ‘முனிவினை மன்னன்றன்மேல்
முறுகினள் ஒழுகும'; என்பது,
கவியின் கூற்றாகக் கொள்ளவும் அமையும். இப்பொருட்கு அரசன் என்பதை வருவிக்க. (38)
மன்னனின்
பொய்யுறக்க முணராத அரசியின் செயல்
111. |
அரசவை விடுத்து மெய்யா லறுசின
னொப்ப மன்னன் |
|
உரையல னமளி தன்மே லுறங்குதல்
புரிந்த போழ்தின் |
|
விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி
லேன்று காமத் |
|
துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந்
துன்னி னாளே. |
(இ-ள்.) மன்னன்-(தன் மனைவியின்
ஒழுக்கத்தாற் சினங்கொண்ட) மன்னன், அரச அவை விடுத்து-ராஜ சபையை விட்டுவிட்டு,
அறு சினன் ஒப்ப-உண்மையில் கோபமற்றவன் போல, உரையலன் - யாதொன்றும் பேசா தவனாகி,
அமளிதன்மேல் - படுக்கையின்மீது, உறங்குதல் புரிந்த போழ்தில்-(பொய்த்)துயில்
கொண்டபோது, விரை கமழ் குழலி-மணம் நாறும் கூந்தலையுடைய அரசி, மேவி- (பள்ளியறையை)
அடைந்து, மெய்த்துயில் என்று -அவன் உறங்குமது உண்மை உறக்கம் என்றே கருதி, காமத்துறை
யினள்-காமவழியினளாகி, பெயர்ந்து - திரும்பி, தோழி குறியிடம் - தோழியால் நிருமிக்கப்பட்ட
குறியிடத்தை, துன்னினாள் - அடைந்தாள்;(எ-று.)
மன்னன் பொய்யுறக்கம் கொண்டகாலத்தில் அங்குச் சென்ற அரசி, காலம் நீட்டித்ததனால்
மெய்த்துயில் என்றெண்ணி, குறியிடம் சேர்ந்தாள் என்க.
தன்மேல் முறுகினள் ஒழுகும் மனைவியின்பால் தானும் உறுசினம் கொண்டிருந்த காவலன், அச்
சினத்தை அடக்கிக்கொண்டிருந்தான் ஆகலின், ‘அறுசினன் ஒப்ப'; என்றார்.
மன்னன்பக்கலில் படுக்கச்சென்ற அவள் அரசன் உறங்குதலைக் கண்டு திரும்பிச் சென்றாள்.
ஆகலின், ‘பெயர்ந்து'; என்றார்.
தோழியால் குறிப்பிட்டுத் தனிமையாக அமைந்த இடம் ‘குறியிடம்‘ எனப்பட்டது.
(39)
|