மன்னன், மனைவியின் செயலைக்
காணப் பின்தொடர்தல்.
112. |
துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர்
வாள்கை யேந்தி் |
|
மயிலினை வழிச்செல் கின்ற வாளரி
யேறு போலக் |
|
கயல்விழி யவடன் பின்னே கரந்தன
னொதுங்கி யாங்கண் |
|
செயலினை யறிது மென்று செறிந்தனன்
மறைந்து நின்றான். |
(இ-ள்.) மன்னன் - அரசன், துயிலினை ஒருவி-
(பொய்த்) துயி்லை நீக்கி, சுடர் கதிர் வாள் கையேந்தி-ஒளி மிகும் வாளைக் கையிலே
தாங்கிக்கொண்டு, ‘ஆங்கண் செயலினை -அவ்விடத்திய நிகழ்ச்சியை, அறிதும் என்று-
அறிந்துகொள்வோம்';என்று எண்ணி, கயல் விழியவள் பின்னே -கயல்போலும் கண்களை யுடையளாகிய அமிர்தமதியின்
பின்னால், மயிலினை வழிச் செல்கின்ற- மயிலுக்குப் பின்னே போகின்றதொரு, வாள்
அரி ஏறு போல -ஒளிபொருந்திய ஆண்சிங்கத்தைப் போல, கரந்தனன் ஒதுங்கி - மறைவாய்
நடந்து, செறிந்தனன்-ஒடுங்கி, மறைந்து நின்றான்-ஒருபுறமாக மறைந்து நின்றான்; (எ-று.)
மன்னன், ‘தேவியின் செயலினை அறிதும'; என்று
எழுந்து வாளேந்தித் தொடர்ந்துசென்று மறைந்து நின்றான் எனக்.
‘தன் உருவம் வெளியாருக்குக் காட்டாது சென்றதைக் ‘கரந்தனன'; என்றும்,
இருளில்(வேறுபொருள்களிடத்து) ஒன்றிநின்றதைச் ‘செறிந்து'; என்றும்,
அவர்களிருந்த இடத்தினைச் அணுகி ஒதுங்கி இருந்ததை, ‘மறைந்து'; என்றும்
கூறினார். (40)
அரசி
தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்
113. |
கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால் |
|
இடைநிலஞ் செல்ல வீர்த்திட்
டிருகையி னாலு மோச்சிப் |
|
புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது
புகல்க வென்றே. |
|
துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத்
துகைத்திட்டானே |
|