- 160 -

மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்.

112. துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி்
  மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக்
  கயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண்
  செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான்.

          (இ-ள்.) மன்னன் - அரசன், துயிலினை ஒருவி- (பொய்த்) துயி்லை நீக்கி, சுடர் கதிர் வாள் கையேந்தி-ஒளி மிகும் வாளைக் கையிலே தாங்கிக்கொண்டு, ‘ஆங்கண் செயலினை -அவ்விடத்திய நிகழ்ச்சியை, அறிதும் என்று- அறிந்துகொள்வோம்';என்று எண்ணி, கயல் விழியவள் பின்னே -கயல்போலும் கண்களை யுடையளாகிய அமிர்தமதியின் பின்னால், மயிலினை வழிச் செல்கின்ற- மயிலுக்குப் பின்னே போகின்றதொரு, வாள் அரி ஏறு போல -ஒளிபொருந்திய ஆண்சிங்கத்தைப் போல,  கரந்தனன் ஒதுங்கி - மறைவாய் நடந்து, செறிந்தனன்-ஒடுங்கி, மறைந்து நின்றான்-ஒருபுறமாக மறைந்து நின்றான்; (எ-று.)

மன்னன், ‘தேவியின் செயலினை அறிதும'; என்று எழுந்து வாளேந்தித் தொடர்ந்துசென்று மறைந்து நின்றான் எனக்.

‘தன் உருவம் வெளியாருக்குக் காட்டாது சென்றதைக் ‘கரந்தனன'; என்றும், இருளில்(வேறுபொருள்களிடத்து) ஒன்றிநின்றதைச் ‘செறிந்து'; என்றும், அவர்களிருந்த இடத்தினைச் அணுகி ஒதுங்கி இருந்ததை, ‘மறைந்து'; என்றும் கூறினார்.                (40)

அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்

113. கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால்
  இடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்
  புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே.
  துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே