வீடுபேறே
எண்ணக் கடவதென உணர்த்தவேண்டி,‘எண்ணமற் றொன்றுமின்றி'; என்றான்.
மறுமையின்பம்எய்தாமையேயன்றி இம்மை யின்பமும் கெடுமென்பான், “மானுயர் வாழ்வு மண்ணின்
மரித்திடு மியல்பிற் றன்றே” என்றான்.
(62)
135. |
அன்றியு முன்னின்1
முன்ன ரன்னைநின் குலத்து ளோர்கள் |
|
கொன்றுயிர் கன்று முள்ளக் கொடுமைசெய்
தொழில ரல்லர் |
|
இன்றுயிர் கொன்ற பாவத் திடர்பல
விளையு மேலால் |
|
நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ
யருளிற் றெல்லாம். |
(இ-ள்.) அன்னை -தாயே, அன்றியும்
- அதுவன்றியும், உன்னின் முன்னர் - உனக்கு முன், நின் குலத்து உளோர்கள் - உன் குலத்துதித்த
முன்னோர்கள், உயிர்கொன்று கன்றும் உள்ளம் - பல் உயிர்களையும்கொன்று அச்செயலில்
அடிப்பட்ட உள்ளத்தோடு,கொடுமை செய் தொழிலர் அல்லர் - தீமை செய்யுந்
தொழிலையுடையவர் அல்லர்; இன்று உயிர் கொன்ற பாவத்து-(நின் சொற்படி) இப்பொழுது
உயிரைக் கொன்ற பாவத்தால், நமக்கு - --, மேலால் இடர் பல விளையும் - பின்னர்த்
துன்பங்கள் பல உண்டாகும்; (ஆதலின்), நீஅருளிற்றெல்லாம்
- நீ கூறிய இவை அனைத்தும், நன்றிஒன்று அன்று -நன்மை தருவதொன்று அன்று. (எ-று.)
முன்னோர் யாருமே செய்யாத இக் கொலைத்தொழிலைச் செய்யும்படி சொல்லுகின்றாயே!
இச்செயல் தீமையே தரும், நன்மை தாராது என்றானென்க.
‘உன்னின் முன்னர்...தொழில ரல்லல்'; என்றதனால்
‘நீயும் அவ்வாறே ஒழுகத் தக்கவள், நீ இது சொல்லுதல்தகாது'; என்பது
குறிப்பு. உன்னின் - ஆலோசிக்குமிடத்து எனினுமாம். கன்றி - அடிப்பட்டு. ‘கொல்வதே
கன்றி நின்றார் கொடியவர் கடிய நீரார'; (சீவக.
2776)என்பது காண்க. ‘எல்லாம்'; என்றது,
சண்டமாரியே கனவில் தோன்றிக் கூறினாளென்றதும் அவளுக்குப் பலி
|