- 185 -
139.  மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய
  பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய [செய்தே
  தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ்
  ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான்.

(இ-ள்.) மாவினில் வனைந்த கோழி வடிவு கொண்டு-அரிசிமாவால் மிக அழகாகச் செய்து வர்ணம் பூசப் பெற்றகோழி யுருவை எடுத்துக் கொண்டு, மன்னன்- --, அவ்வை ஆய பாவி தன்னோடு-தாயாகிய பாவியுடன், படுகொலைக்குஇடமது ஆய தேவிதன் இடை-(பல் உயிர்களையும் மடிக்கும்) கொடிய கொலைக்களமாகிய சண்டமாரிகோயிலின் கண், சென்று எய்தி-சென்றடைந்து, சிறப்பொடு வணக்கம் செய்து - விழா வெடுத்து அஞ்சலி செலுத்தி,  ஆ -அந்தோ!அவன  - அவ் யசோதரன், தன் கை வாளால்-தன் கையின் வாளால், எறிந்து- (தானே மாக்கோழியின்தலையை) வெட்டி, இது கொண்டு அருள் - தேவியே, இப்பலியை ஏற்றருள்வாயாக, என்றான் - என்று வேண்டினான். (எ-று.)

அன்னையுடன் சென்ற மன்னன், தேவிக்கு மாக்கோழியைப் பலியிட்டா னென்க.

மாவினில் - மாவினால்;  வேற்றுமை மயக்கம். வனைதல்-அலங்கரித்தல்.  அவ்வை -தாய்.  பாவத்தைச் செய்ய ஏவிய காரணத்தால், அவளைப், ‘பாவி ‘ என்றார். இரக்கத்தால்,  ‘ஆ‘ என்று கூறினார் ஆசிரியர்.  தேவி - மாரி தேவதை. தன், சாரியை.  இனி, ‘எறிந்துகொண்டு‘ என்று சேர்த்துச்சொல்லினுமாம்.                          (67)

மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்

140.  மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட
  சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி
  கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ
  மாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே.

(இ-ள்.) மேல் இயல் தெய்வம் - வானில் இயங்கும்தெய்வம் (ஒன்று), கண்டு - (அரிசி மாவால் செய்து வர்ணம்