139. |
மாவினில் வனைந்த கோழி வடிவுகொண்
டவ்வை யாய |
|
பாவிதன் னோடு மன்னன் படுகொலைக்
கிடம தாய [செய்தே |
|
தேவிதன் னிடைச்சென் றெய்திச்
சிறப்பொடு வணக்கஞ் |
|
ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண்
டருளி தென்றான். |
(இ-ள்.)
மாவினில் வனைந்த கோழி வடிவு கொண்டு-அரிசிமாவால் மிக அழகாகச் செய்து வர்ணம்
பூசப் பெற்றகோழி யுருவை எடுத்துக் கொண்டு, மன்னன்- --, அவ்வை ஆய பாவி தன்னோடு-தாயாகிய
பாவியுடன், படுகொலைக்குஇடமது ஆய தேவிதன் இடை-(பல் உயிர்களையும் மடிக்கும்) கொடிய
கொலைக்களமாகிய சண்டமாரிகோயிலின் கண், சென்று எய்தி-சென்றடைந்து, சிறப்பொடு
வணக்கம் செய்து - விழா வெடுத்து அஞ்சலி செலுத்தி, ஆ -அந்தோ!அவன - அவ் யசோதரன்,
தன் கை வாளால்-தன் கையின் வாளால், எறிந்து- (தானே மாக்கோழியின்தலையை)
வெட்டி, இது கொண்டு அருள் - தேவியே, இப்பலியை ஏற்றருள்வாயாக, என்றான் - என்று
வேண்டினான். (எ-று.)
அன்னையுடன் சென்ற மன்னன், தேவிக்கு மாக்கோழியைப்
பலியிட்டா னென்க.
மாவினில் - மாவினால்; வேற்றுமை மயக்கம். வனைதல்-அலங்கரித்தல்.
அவ்வை -தாய். பாவத்தைச் செய்ய ஏவிய காரணத்தால், அவளைப், ‘பாவி ‘ என்றார்.
இரக்கத்தால், ‘ஆ‘ என்று கூறினார் ஆசிரியர். தேவி - மாரி தேவதை. தன், சாரியை.
இனி, ‘எறிந்துகொண்டு‘ என்று சேர்த்துச்சொல்லினுமாம்.
(67)
மாக்கோழியில்
ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்
140. |
மேலியற் றெய்வங் கண்டே விரும்பின
தடையப் பட்ட |
|
சாலியி னிடியின் கோழி தலையரிந்
திட்ட தோடி |
|
கோலிய லரசன் முன்னர்க் கூவுபு
குலுங்கி வீழ |
|
மாலிய லரசன் றன்சை வாள்விடுத்
துருகி னானே. |
(இ-ள்.)
மேல் இயல் தெய்வம் - வானில் இயங்கும்தெய்வம் (ஒன்று), கண்டு - (அரிசி மாவால்
செய்து வர்ணம்
|