வீழ்வாள் - அனலைப்போலத் துன்பந்தரும் நரகத்துவீழ்வாளாகிய அவள், ஏது செய்தாள்
- என்ன கொடு்ஞ்செயல் செய்தாள் ! காண்மின். ( எ-று.)
மகனை அரசியலில் வைத்து வனஞ் செல்லக் கருதிய மன்னனுக்கு, தேவி கொடிய சதி செய்வாளாயினா
ளென்க.
படர்தல், செல்லுதல். ‘நரகத்து வீழ்வாளாகிய தேவி‘ என்றும் இயைக்கலாம். வீழ்வாள்,
வினையாலணையும் பெயர். (71)
144. |
அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே |
|
விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும் |
|
அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால் |
|
அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள். |
மேல்
(இ-ள்.) விரை செய் தார் இறைவ - மணங் கமழும் மலர்மாலை யணிந்த
தலைவனே, அரச - அரசனே, அரசு நீ துறத்தியாயின் - தாம் அரசபாரத்தைத் துறப்பீராயின்,
எனக்கும் - அடிச்சியாகிய எனக்கும், அஃதே - அத்துறவே, அமைக - அமைவதாகுக; என் வியன்
மனை -எனது பெரிய மனையில், இன்று - இன்றைக்கு, நீ மைந்தனோடும் - நீர் நம் மகனோடு,
அமுது கைக்கொண்டருளுதற்கு உரிமை செய்தால் - உணவினை ஏற்றருளுதற்கு அன்பு செய்தால்,
அடிகள் - --, அரசு - அரசுரிமையை, அவனதாகநாம் விடுதும் - அவனுக்கு உரித்தானதாக (நாம்)
விடுவோம்,என்றாள் - என்றியம்பினாள்.
மன்னன் உணவு கொள்ளும்படி அரசி வேண்டினாளென்க.
அவனதாக இடுதும் என்றும் பிரித்துப் பொருள்கூறலாம், அடிகள் உயர்வு குறிக்குஞ் சொல்;
(சீவக.1873, 2099). (72)
145. |
ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும் |
|
வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய
தமைக வென்றே |
|
தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை
தான மர்ந்தான் |
|
தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம
தாமே. |
|