|
மையலுற் றழுந்தி நான்கு கதிகளுட் கெழுமிச் செல்வர் |
|
ஐயமில் சாட்சி ஞானத் தொழுக்கத்தோ
ரறிவ தாகும். |
(இ-ள்.)
சீவன் இயல்புதான் - உயிரின் தன்மை, இவ்வகையாகும் - (மேலே கூறிய) இவ்வகையாகும்,
இயல்புவேறு ஆம் - அவ்வுயிரின் இயல்பினின்றும் வேறாகிய, வெய்ய தீ வினைகளாலே -
கொடிய இருவினைகளினாலே, வெருவுறு துயரின் மூழ்கி - அஞ்சத்தக்க துன்பத்திலாழ்ந்து,
மையல் உற்று - மயக்கமுற்று, அழுந்தி - பிறவிச் சுழற்சியில் அழுந்தி, நான்கு கதிகளுள்
--, கெழுமிச் செல்வர் - பொருந்திச் சுழல்வர்: (இது) ஐயம் இல் காட்சி ஞானத்து
ஒழுக்கத்தோர் - சந்தேஹம் *முதலிய குற்றங்களில்
நீங்கின நற்காட்சி நல்லறிவு நல்லொழுக்கம் என்ற மூன்றையும் உடைய சான்றோரே, அறிவதாகும்
- தெளிய அறிவதாகும்.
உயிரின் இயற்கை,
கடையிலா அறிவு முதலிய தன்மையதே; அதற்கு மாறாகிய செயற்கையாலாகிய நல்வினை தீவினைகளினால்
பற்றப்பட்டு நர சுர நாரக திர்யக் என்னும் நாற்கதியிற் சுழன்று வருந்துவது மாற்றுயிர்
என்பதாம்: இவ்விருவகை உயிர்களையும் அறிபவர் மும்மணி நிறைந்த சான்றோரே யென்றா
ரென்க.
நான்கு கதியும் கூறியதனால், ‘வெய்யதீவினை’ என்பது, நல்வினை தீவினை இரண்டையும் குறிக்கும். வெய்ய
- விரும்புதற்குரிய: ‘வெய்யநெய’ (தக்கயாகப்) ஈண்டு நல்வினை, அதர்மானுபந்தி புண்யம். யசோ.
4.உரை பார்க்க. தான், அசையெனவுமாம். (13)
233. |
ஆகமத் தடிக ளெங்கட் கதுபெரி தரிது
கண்டீர் |
|
ஏகசித் தத்த ராய விறைவர்கட்
கெளிது போலும் |
|
போகசித் தத்தோ டொன்றிப்
பொறிவழிப் படரு நீரார்க் |
|
காகுமற் றுறுதிக் கேது அருளுக தெருள
வென்றான். |
(இ-ள்.)
ஆகமத்து அடிகள் - பரமாகமமுணர்ந்த அடிகளே, அது - சீவனியல்பினை அறிதல் முதலாகிய அது,
|