எங்கட்கு - அறிவிலிகளாகிய எங்களுக்கு, பெரிது அரிது
- மிக அரிது ; ஏக சித்தத்தர் ஆய -
ஒரு வழிப்பட்ட மனத்தராய்த் தியானத்திலமரும், இறைவர்கட்கு - (தங்களைப் போன்ற)
ஞானிகளுக்கு, எளிதுபோலும் - மிக எளிதாகலாம்: (ஆதலின்), போக சித்தத்தோடு ஒன்றி
- இன்பம் நுகரும் மனத்தோடு கூடி, பொறிவழிபடரும் நீரார்க்கு-ஐம்பொறிகளின் வழியே
செல்லும் தன்மையையுடையவர்களுக்கு, ஆகும் உறுதிக்கு ஏது- ஆகும் நன்மைக்கு உரியமார்க்கத்தை,
தெருள அருளுக - விளங்க உரைத்தருள்வீராக, என்றான் - என்று சண்டகருமன் வேண்டினான்.
(எ-று.)
அடியேனுக்கு, அறத்தை மேற்கொள்ளும் எளிய முறையை அருளுக
என்றானென்க.
ஹேது - ஏது என்றாயிற்று. ஏது - காரணம்: இதனால் இது ஆமெனல்.
ஏக சித்தத்தரைப்போல, போக சித்தத்தராகிய என்போன்றாரும் உண்மைநெறியடைய ஒர்
எளியவழியை அருளுக என்று தளவரன் வேண்டினானென்க.
(14)
234. |
அற்றமில் லறிவு காட்சி யருந்தகை யொழுக்க மூன்றும் |
|
பெற்றனர் புரிந்து பேணிப் பெருங்குணத்
தொழுகு வாருக் |
|
குற்றிடு மும்ப ரின்ப முலகிதற்
கிறைமை தானும் |
|
முற்றமுன் னுரைத்த பேறும் வந்துறும்
முறைமையென்றான். |
(இ-ள்.)
அற்றம்இல்- குற்றமில்லாத, அரும்தகை - அரிய தகவினையுடைய, அறிவு காட்சி ஒழுக்கம்
மூன்றும் பெற்றனர் - நல்லறிவு நற்காட்சி நல்லொழுக்கம் என்னும் ரத்னத்ரயத்தையும்
அடைந்தவர்களாய், புரிந்து பேணி-விரும்பிஆதரித்து, பெருங்குணத்து ஒழுகுவாருக்கு-(தர்சன
விசுத்தி காட்சியின் தூயதன்மை) முதலாகிய பதினாறு பாவனை முதலிய, பெருங்குணத்தில்
தவறின்றி ஒழுகும் சான்றோர்க்கு, முறைமை - முறையாக, உம்பர் இன்பமும் - மறுமையில்
தேவேந்திர பதவியும், உலகு இதற்கு இறைமை தான்உம் - மீண்டும் இவ்வுலகிற்கு அரசனாம்
பதவியும், உற்றிடும் -
|