(தோத்திரத்திட்டு) என்றும் கூறியிருப்பவை ஈண்டு அறிதற்பாலன,
இந்தச் செய்யுளிற் கூறிய இவ் வெண் வகையேயன்றி. நீரை வடிகட்டி உபயோகித்தல், கந்த
மூலாதிகளைப்புசியாதிருத்தல், இரவில் உண்ணாதிருத்தல் முதலிய பல சிறந்த அறங்களை
இல்லறத்தார்க்கு உரியனவாக ஆகமங்கள் கூறும். அவையும் அறிந்து தெளிக. (17)
237. |
கொலையின் தின்மை கூறிற்1
குவலயத் திறைமை செய்யும் |
|
மலைதலில் வாய்மை யார்க்கு2
வாய்மொழி மதிப்பை யாக்கும் |
|
விலையில்பே ரருளின் மாட்சி விளைப்பது
களவின் மீட்சி |
|
உலைதலில் பெருமை திட்ப முறுவலி
யொழிந்த தீயும். |
(இ-ள்.)
கூறின்- (ஒழுக்கத்தா லடையும் பயனைக்) கூறுமிடத்து, கொலையினது இன்மை - கொல்லாமையாகிய
அறம், குவலயத்து இறைமை செய்யும் - நிலவுலகத்து அரசத் தன்மையை நல்கும்: மலைதல்
இல் வாய்மொழி - மாறுபாடு இல்லாத உண்மையானது, வாய்மையார்க்கு - அவ்வுண்மையை யுடையவர்க்கு,
மதிப்பை ஆக்கும் - நன்மதிப்பைத் தரும்: களவின் மீட்சி - (இருவகைக்) கள்ளச்
செயலைத் தவிர்தல் (களவின்மை), விலை இல் - விலைமதிக்க முடியாத, பேர் அருளின்
மாட்சி விளைப்பது - மிக்க அருட்செல்வத்தை விளைப்பதாகும்: ஒழிந்தது - ஏனைப் பிறன்
மனை நயவாமை, உலைதல் இல் பெருமை - அழிவில்லாத பெருமையையும், திட்பம் - உறுதியையும்,
உறுவலி - மிக்க வலிமையையும், ஈயம் - நல்கும். (எ-று.)
கொல்லாமை முதலியன நல்கும் நன்மைகளைக் கூறினாரென்க.
குவலயம் - நிலமாகிய வட்டம். மனம் வேறு சொல்வேறு செயல் வேறின்றி நிகழ்தலை,
‘மலைதல் இல் வாய்மை ' என்றார்.
238. |
தெருளுடை மனத்திற் சென்ற தெளிந்துணர்
வாய செல்வம் |
|
பொருள்வயி னிறுக்க மின்மை புணர்த்திடும்
புலைசு தேன்கள். |
1
கூடார்.
2
யாக்கும்,யார்க்கும்.
|
|