- 258 -

(இ-ள்.) சிலை பயில் வயிரத் தோளாய் - விற்றொழிலைப் பயின்ற திண்ணிய தோள்களையுடைய சண்டகருமனே, செப்பிய பொருள் இது எல்லாம் - (இல்லறத்தார்க்கு உரியவெனக்) கூறிய இவை அனைத்தும், உலைதல் இல் மகிழ்வோடு - சஞ்சலமில்லாத மகிழ்வுடன். உள்ளத்து - --, உணர்ந்தனை கொள்க என்ன - உணர்ந்து கைக்கொள்வாயாக என்று முனிவரர் கூற, (தளவரன் அவரை நோக்கி), அடிகள் - அடிகளே! அலைசெய்வது ஒழியின் - (உயிர்களைக்)கொல்லுந் தொழிலைக் கைவிடுவேனாயின்,  வாழ்க்கை அழியும் - என் வாழ்க்கை கெட்டழியும்:  (ஆதலின்), கொலையினில் ஒருவல் இன்றி - கொலைத்தொழில் ஒன்றுமட்டும் தவிர்தலின்றி, அருளிற்று எல்லாம் - தாங்கள் (இல்வாழ்வானுக்கு) அருளிய ஏனைய விரதங்களனைத்தும், கொண்டனென் - ஏற்றுக்கொண்டேன், என்றான் - என்று கூறினான்.

முனிவரர், தோளாய் !  யான் கூறிய விரதங்களை மேற்கொள்க என்று பணிக்க, என் பிழைப்புநிமித்தம் கொலையை விடுதல் இயலாது.  அது தவிர ஏனைய விரதங்களை ஏற்றுக் கொண்டே னென்றா னென்க.

சிலை பயிலுதல் - வில்வித்தையில் பழகுதல்.  ‘இது எல்லாம், ‘ஒருமைப் பன்மை மயக்கம். உணர்ந்தனை, முற்றெச்சம்.  உயிரை அலைத்தே கொலை புரிவதனால், ‘அலை செய்வது‘ என்றான்.   (20)

முனிவரர் மீண்டும் கூறல்

240.  ஆருயிர் வருத்தங் கண்டா லருள்பெரி தொழுகிக1 கண்ணால்
  ஒருயிர் போல நெஞ்சத் துருகிநைந2 துய்ய நிற்றல்
  வாரியின்3 வதங்கட் கெல்லா மரசமா4 வதமி5 தற்கே
  சார்துணை யாகக் கொள்க தகவுமத் தயவு மென்றான். 

(இ-ள்.) (ஐயனே), ஆர் உயிர் வருத்தம் கண்டால் -(துன்பம் பொறுத்தற்கு)  அரிய உயிர்கள் படும் வருத்தத்தைக் கண்டால்,

 

1 தொழுகு

2 துருகினைந

3 வாரியில

4 மரசவிவ

5 வதம.