பாராட்டுதற்கு என்க. உள்ளுதல் - நினைத்தல். முகம் -
முதலது வாய்: பின்னது முன்பு என்ற பொருளது. ‘ ஈன்றாள் முகத்தேயு மின்னாதால்‘ (குறள்.
923). (30)
250. |
சொல்லறி கணையை வாங்கித் தொடுத்தவன்
விடுத்தலோடும்1 |
|
நல்லிறைப் பறவை தம்மை நடுக்கிய
தடுத்து வீழச் |
|
சில்லறி வினக2
ளேனுந் திருவறப் பெருமை யாலே |
|
வல்லிதின் மறைந்து போகி மானுடம்
பாய வன்றே. |
(இ-ள்.) அவன்
-அம்மன்னன், வாங்கி - (வில்லை) வளைத்து, சொல் அறிகணையை - ஒலிவந்த திசையை
அறிந்தேகும் அம்பினை, தொடுத்து - (அந்த வில்லில்) தொடுத்து, விடுத்தலோடும் -
எய்யவும், நல் இறை பறவை தம்மை அடுத்து - அழகிய சிறகுகளையுடைய கோழிகளை யடுத்து,
நடுக்கியது வீழ - (அவற்றை) நடுங்கச் செய்து வீழ, சில் அறிவின ஏனும் - சிற்றறிவினை
யுடைய கோழிகளாயினும் திருஅறப் பெருமையாலே - (அகம்பனரருளிய) திருவறத்தை மேற்கொண்ட
பெருமையினால், வல்லிதின் மறைந்துபோகி -விரைவாக (த்தம் உடலினின்றும்) பிரிந்து
சென்று, மானுடம்பு ஆய - மக்கட் பிறவியன ஆயின (மக்கட் பிறப்பையடைந்தன). (எ-று.)
மன்னன் எய்ததும்
கோழிகள் இறந்து மானிடப் பிறப்பை அடந்தனவென்க.
சொல் அறி கணை - சப்தவேதிபாணம். வாங்கி -அம்பை
எடுத்து எனினுமாம். இறை - சிறகு. அறிவனகள்:கள், அசை, உயிர் துறந்ததும் ஒன்றுமுதல்
நான்கு சமயத்திற்குள் (கார்மண) சூட்சும சரீரத்துள் மறைந்து சென்றுமறு பிறவியை எய்துதலால்,
‘வல்லிதின் மறைந்துபோகி‘ என்றார். ‘ஏகம் த்வௌ த்ரீந் வா அநாஹாரக:‘ என்ற
தத்த்வார்த்த சூத்ரத்தின் உரையினால் இதன் விவரம் அறியலாகும். கோழிகள் தருமத்தியானத்துடன்
(யசோ. 147 -உரை). மரித்தனவாதலின் மக்களாயின. ‘மானுடம்பு‘
1
|
விடுத்தலோடு. |
2 |
சில்லறிவினைக |
|