- 274 -

இனிய வுயிரை, பறிப்பன் - போக்குவேன், என - என்று வஞ்சினங் கூறி, மாதவனின்மேல்  - சுதத்தமுனிவன்மேல், மாற்ற அரிய சீற்றமொடு வந்தான் - பிறரால்  மாற்றமுடியாத பெருங்கோபத்தோடு வந்தான்.  (எ-று.)

அரசன், வேட்டையில் விலங்குகள் அகப்படாததனால் முனிவர்மேல் கோபங்கொண்டு வந்தான் என்க. காடெங்கும் தேடினதை, ‘அடவிபுடை தடவி’ என்றார்.  வினை -தொழில்.  பாற்றியவன் - நீக்கியவன்: பாற்றுதல் - நீக்குதல்: ‘பகலோன் கெடுமெனப் பாற்றுவனபோல’ (பெருங்.  உஞ்சைக். 38,15).   (38)

258.  கொந்தெரி யுமிழ்ந்தெதிர் குரைத்ததிர்வ கோணாய்1
  ஐந்தினொடு பொருததொகை யையம்பதி னிரட்டி
  செந்தசைகள் சென்றுகவர் கென்றுடன்2 விடுத்தான்
  நந்தியருண் மழைபொழியும் நாதனவன் மேலே.

(இ-ள்) (அரசன்), அருள் மழை நந்தி பொழியும் நாதன் அவன் மேல் - உயிர்கள்மேல்) அருள்மழை மிக்குப் பொழியும் நாதனாகிய சுதத்தமுனிவன்மேல்,   கொந்து எரி உமிழ்ந்து - சினத்தால் தீ உமிழ்ந்து, எதிர் குரைத்து - எதிர்நோக்கிக் குரைத்து,  அதிர்வ - (உயிர்களை) நடுங்கச்செய்வனவாகிய, ஐந்தினொடு பொருத் தொகை ஐம்பதின்இரட்டி கோள் நாய் - ஐந்நூறு வேட்டை நாய்களை, உடன் சென்று - விரைவிற் சென்று,  செந்தசைகள் கவர்க என்று- செவ்விய தசைகளைப் பிடுங்கித் தின்னுக என்று சாடைகாட்டி, விடுத்தான் - ஏவினான்.  (எ-று.)

அரசன் ஐந்நூறு நாய்களை முனிவன்மேல்  ஏவினானென்க.

கொந்து - கோபம்: ‘இந்தனக் குழுவைக் கொந்தழலடூடம்’ (ஞானா. 63 - 11). கொந்து - கொத்து எனலுமாம். குரைத்தல் - குலைத்தல்.  நாய்கள் எதிர்நோக்கிக் குரைத்த

 

1 கோனாய்,

2 கென்றென.