க்ருஷ்ண, நீல, கபோத, பீத, பத்ம, சுக்லலேஷ்யை என்பன. (லேஷ்யை
- எண்ணம்), அவற்றுள், க்ருஷ்ணலேஷ்யை, மிக்க கோபம் முதலியன உடையது. இதனை, ‘அதிரௌத்ரீ
ஸதாக்ரோதீ - மத்ஸரீ தர்மவர்ஜ்ஜித:, நிர்த்தயோ வைரஸம்யுக்த: க்ருஷ்ண லேஷ்யாதிகோ
நர:‘ என்ற சுலோகத் தால் அறியலாகும். மறம் - கொலை. ஐயோ! இரக்கக் குறிப்புச்
சொல்.(40)
இதுமுதல் நான்கு கவிகளின்
வணிகள் முனிவன் சிறப்புரைத்தல்
260. |
காளைதகு கல்யாண1
மித்திர னெனும்பேர் |
|
ஆளியடு திறல்வணிக னரசனுயி ரனைய |
|
கேளொருவன் வந்திடை புகுந்தரச கெட்டேன் |
|
வாளுருவு கின்றதுவென் மாதவன்மு னென்றான். |
(இ-ள்.)
அரசன் - யசோமதிக்கு, உயிர் அனைய கேள் - உயிரொத்த நண்பனாகிய, காளை தகு -
இளைய தகுதியுடைய, கல்யாண மித்திரன் எனும் பேர் - கல்யாண மித்ரன் என்னும் பெயருள்ள,
ஆளி அடு திறல் - சிங்கத்தை வெல்லும் ஆற்றலுடைய, வணிகன் ஒருவன் - ராஜரேஷ்டி(வியாபாரி)
ஒருவன், வந்து இடை புகுந்து - அரசன் எதிரில் வந்து முனிவருக்கு இடையில் புகுந்து தடுத்து
, கெட்டேன் - ஐயோ கெட்டேன் (என்று வாய் விட்டுக் கூறி), அரச - வேந்தே, மாதவன்
முன் - தபோதனர்மேல், வாள் உருவுகின்றது என் - (உறையி னின்றும்) வாளுருவி ஓங்குவது யாது காரணம்? என்றான் -என்று வினவினான்.
(எ-று.)
இளமை,
குணம், வன்மை, நட்பு ஆகிய நான்கும் ஒருங்கெய்தப் பெற்ற வணிகனாகிய கல்யாண மித்ரன்
அரசனைத் தடுத்தானென்க.
கெட்டேன், உலக வழக்கு : இரக்கக் குறிப்புச்சொல். வணிகன்
- அரசரால் சிரேஷ்டிபதம் பெற்றவன்: அரசருடன் உறைதல் மரபு. இதை ஸ்ரீபுராணத்துள் காணலாம்.
(சக)
|