- 277 -
261.  வெறுத்துடன் விடுத்தரசி னைத்துக ளெனப்பேர்
  அறப்பெரு மலைப்பொறை யெடுத்தவ னடிக்கண்
  சிறப்பினை யியற்றிலை சினத்தெரி மனத்தான்
  மறப்படை யெடுப்பதுவென் மாலைமற வேலோய்.

(இ-ள்) மாலை மறம் வேலோய் - வெற்றிமாலை புனைந்த வீரவேலேந்திய வேந்தே, அரசினை துகள் என வெறுத்து -அரசச் செல்வத்தினை அற்பமென்று வெறுத்து,  உடன் விடுத்து - (இல்லறப்பற்று அனைத்தையும்)  ஒருங்கே விட்டுத் துறந்து, பேர் அறப் பெருமலை பொறை எடுத்தவன் - சிறந்த தருமமாகின்ற பெரிய  மலைபோன்ற தபோபாரத்தினைத் தாங்கின முனிவனது.  அடிக்கண் - திருவடிக் கண், சிறப்பினை இயற்றிலை - சிறந்த பூசனை செய்யாமல், சினத்து எரிமனத்தால் - கோபக் கனலையுடைய உள்ளத்தோடு, மறப்படை எடுப்பதுஎன் - வலிய  வாளோங்குவது என்னை?

முனிவனை வணங்குவதைவிட்டுப் பிணங்குவது யாது காரண மென்றானென்க.

அரசு தவம் முதலியவற்றையும் பாரமெனக் கூறுதல் மரபு: ‘அருந்தவ மரசபார மிரண்டுமே யரிய.‘ சூளா. 271. வேலுக்கு மாலை சூடுதல் மரபு.  மாலை - இயல்புமாம்.  துகள் - அற்பம் என்னும் பொருளது.  (42)

262.  ஆகவெனி னாகுமிவ1 ரழிகவெனி னழிப2
  மேகமிவண் வருகவெனின் வருமதுவும் விதியின்
  ஏகமன ராமுனிவர் பெருமையிது வாகும்
  மாகமழை வண்கைமத யானைமணி முடியோய்.

(இ-ள்.) மாக மழை வண்கை மத யானை மணிமுடியோய் - வானத்துள்ள மழைபோன்று கொடுக்கும் கையையும் மதத்தோடு கூடிய யானையையும் மணிமுடியினையுமுடைய வேந்தே, இவர் - இம்முனிவர், ஆக எனின் ஆகும் - ஒரு பொருளைக் குறித்து இது) விருத்தி அடைக என்பாராயின் அங்ஙனமே விருத்தியடையும்:  அழிக எனின் அழிப-

 

1 னாகவிவ.

2 ரழிய வெனி லழிக.