(இ-ள்)
வேந்தே - --, இங்கு உலகு தொழும் முனியை - இவ்வுலகில் உயர்ந்தோர் வணங்கும் இம்முனிவரரை,
யாவன்எனின் - யாவனென அறிய வினவுவை யாயின், இது -யான் கூறுமிதனை, கேள் - --,
தேர்ந்து உணரின் - ஆராய்ந்தறியுமிடத்து, இவன் - --, கங்கைகுதிலகன்-கங்கைகுலத்திற்
பிறந்த மன்னருட் சிறந்தவன்: கலிங்க பதி - கலிங்க தேசத்தையாளும் மன்னன், அதனை
- அக்கலிங்க தேசத்தினை, பொங்கு புயவலியில் - சிறந்த தன்தோள்வலியால், பொதுவு
இன்றி முழுதும் ஆண்ட இவன் -வேற்றரசர்கட்குப் பொதுவின்றித் தானே முழுவதும் (ஏகசக்ராதிபனாய்)
ஆட்சி புரிந்த இவன், சிங்கம் என்றுதெளி - (பகையரசர்களாகிய யானைகள் அஞ்சத்தக்க)
சிங்கம்போன்றவன் என்று தெளிவாயாக. (எ-று.)
இம்முனிவன்,
கலிங்கநாட்டின் அரசன் என்றானென்க. கலிங்க பதியதனை -கலிங்கநாட்டை என்றுமாம்.
பதி - நாடு: ‘பொதுக்கடிந்தாள்க‘ என்றார் தோலா மொழித்தேவரும்.
இதுமுதல்
ஆறு கவிகளால், வணிகன் அரசனுக்கு
முனிவர்பெருமையைத் தெளிவிக்கின்றான்
268. |
மேகமென மின்னினொடு வில்லுமென வல்லே |
|
போகமொடு பொருளிளமை பொன்றுநனி யென்றே |
|
ஆகதுற வருள்பெருகு மறனொடத னியலே |
|
போகமிகு பொன்னுலகு புகுவனென நினைவான். |
(இ-ள்.) ‘மேகம்
என - மேகம்போல, மின்னினொடு வில்லும் என - மின்னலும் இந்திரவில்லும்போல, போகமொடு
பொருள் இளமை - போகமும் பொருளும் இளம்பருவமும், நனிவல்லே பொன்றும் என்று - மிக
விரைவாகக் கெடும் என்று கருதி, துறவு ஆக - நான் துறப்பேனாக:(அத்துறவினால்) அறனோடு
அருள்பெருகும் - நல்லறத்தோடு அருளும் மிகும்: அதன் இயலே - அதன் இயல்பினால், போகம்
மிகு பொன்உலகு புகுவன் - போகம் அதிகமாயுள்ள வானுலகின் (மகர்த்திக) தேவ பதவியை
எய்துவேன்,‘ என நினைவான் - என்று (அவ்வேந்தன்) கருதினான்.
|