- 288 -

பதையும்: உரையில், பாவங்கொட ப்ரதிக்ரமணம் சொல்லிப்படிவம் நிற்றல் என்றிருப்பதையும் காண்க.  ‘ நின்னுயிரை நீகளையின் இன்னருளதென்னாம்‘ என்று பிரித்துப் பொருள்கூறலும் அமையும்.  இன்அருள் - யாவருக்கும் நன்மைசெய்யும் அருள்.  ‘அருளது‘ என்பதில்,  ‘ அது‘ பகுதிப்பொருள் விகுதி என்று வழங்கும். (55)

275.  முன்னமுரை செய்தபொருள் முடிந்திலது முடியப்
  பின்னுமிகை1 பிறவுமுரை2 பேசுதிற நினைவுந்
  துன்னுயிரின்3 முன்னிது துணிந்தபிழை தூரப்4
  பின்னைநினை கின்றவிது பிழைபெரிது மென்றான்.

(இ-ள்.) முன்னம் உரைசெய்த பொருள்  முடிந்திலது - முன்னர் (265 ல்) வணிகனால் கூறிய பொருள்இன்னம் முடியவில்லை: முடிய - அது  முடிவதற்கு,  பின்னும்-மேலே, உரை பிறவும் பேசுதிறம் நினைவும் மிகை - உரைக்க வேண்டிய பிற அறவுரைகளும் அதனை நினைக்கவேண்டிய தியானமும் மிகுதியாயுள்ளன : (அவற்றைவிட்டு)   முன் துன் உயிரின் இது துணிந்த பிழை - (நின்)  முன்னர்த் தோன்றிய எம்மை மாய்க்கக் கருதிய  இப்பிழையை, தூர - தூர்க்கவேண்டி  (பரிகரிக்கவேண்டி),  பின்னை  நினைகின்ற இது - மீண்டும் நின்னை நீயே தற்கொலை புரிவதாகக் கருதுகின்ற இது, பெரிதும் பிழை - பெரும் பிழையாகும்,  என்றான் - என்று முனிவரர் கூறினார்.  (எ-று.)

முனிவர் மன்னன் பிழைகளை எடுத்தோதினாரென்க.

‘முன்னம்‘ என்றது, 265-ல்,  ‘செவ்விமையி்ன்  நின்றவர் திருந்தடி பணிந்துன்,  வெவ்வினை கடந்து‘  என்று கூறியதனை நோக்கியாகும்.  மிகை - அதிகம்  திறம்-உறுதி. துன் - நெருங்கிய. ஏனையகொடிய தீயசெயல்களைவிடத் தற்கொலை செய்துகொள்ள எண்ணுபவர்களும் செய்துகொண்ட

 

1 மிசை.

2 முள

3 துன்னவயின், துன்னியிரின

4 தூராப்