- 300 -
287.  திலப்பொறியி னிட்டனர்தி ரிப்புவநெ ருப்பின்
  உலைப்பெரு கழற்றலை யுருக்கவு முருத்துக்
  கொலைக்கழுவி னிட்டனர் குலைப்பவுமு ருக்கும்
  உலைப்பரு வருத்தம துரைப்பரிது கண்டாய்.

(இ-ள்.) (அந்நாரகனை), உருத்து - (பழைய நாரகர்கள்) வெகுண்டு, திலப்பொறியின் இட்டனர் திரிப்பவும் - எள் அரைக்கும் யந்திரத்தில் (காணத்தில்) இட்டு  அரைக்கவும்: நெருப்பின் உலை பெருகு அழற்றலை உருக்கவும்-(கொல்லன் உலைபோலும்) நெருப்பையுடைய உலையில் மிக்குள்ள அழலில் இட்டு உருக்கவும்: கொலை கழுவின் - கொலைபுரியும் கழுமரத்தின், இட்டனர் - இட்டவர்களாய், குலைப்பவும் - அழிக்கவும்.  முருக்கும் - (தன்னை)  அழியக் செய்த, உலைப்பரும் வருத்தம் அது - போக்குதற்கரிய அவ்வருத்தத்தினை, உரைப்ப - சொல்ல அரிது - இயலாது.

செக்கிலிட் டரைத்தல் முதலாகிய அந்நராகன் எய்திய பல துன்பங்களை உரைக்க இயலாது என்றனரென்க.

திலம் - எள்.  ‘செக்குரலிடைப் பல திலத்தினெரிகின்றார்‘ (மேரு. 955.) என்றும், ‘கும்பி தன்னுள் கொந்தழலழுத்தியிட்டு நவிகுவர்‘  (சீவக. 2770) என்றும், ‘கழுவிலேற்றி‘ (சீவக, 2766) என்றும் கூறியன, ஈண்டு  ஒப்பு நோக்கற்பாலன.  இட்டனர்,   முற்றெச்சம்.  அழற்றலை:தலை, ஏழனுருபு.  கண்டாய் -   முன்னிலையசை :                     (68)

288.  ஒருபதினோ டொருபதினை யுந்தியத னும்பர்
  இருபதினொ டைந்துவி லுயர்ந்தபுகை யென்றும
  பொருவரிய துயரினவை பொங்கியுடன் வீழும்
  ஒருபதினொ டெழுகடல்க ளளவு மொளித் தாரோய்.

(இ-ள்.)ஒளிதாரோய் - ஒளி தங்கிய மாலையணிந்தமன்னவ !  ஒரு பதினொடு ஒருபதினை உந்தி அதன் உம்பர் - ஒரு பத்தோடு ஒரு பத்தினைப் பெருக்கிய தொகையின் மேல் (நூற்றின்மேல்), இரு பதினொடு ஐந்துவில் உயர்ந்த - இருபத்தைந்து (நூற்றிருபத்தைந்து)  வில்லளவினவாக உயர்ந்தனவாகிய, பொரு அரிய துயரின் அவை - ஒப்பில்லாத