நின்று, சுடுகின்ற - வருத்துகின்ற,
நரகத்துள் - அவ்வைந்தாம் நரகத்தில், அமிழ்தமதிஉறுவ அல்லல் - நின் தாயாகிய
அமிர்தமதி அடைகின்றனவாகிய துன்பங்கள், இவை அல்லனஉம் - (யான் கூறிய) இவையல்லாதன,
எல்லை இல - எல்லை யில்லாதனவாகும் : (அவை), இது இது என எண்ணி - இன்னது இன்னது
என எண்ணி, ஒருநாவின் சொல்ல உலவா - என் ஒரு நாவினால் எடுத்துக் கூறமுடியாதனவாகும்:
(ஆதலின்), ஒழிக - அவை கெடுக.
அமிர்தமதியடையுந் துன்பங்களை
என் ஒரு நாவாற் கூறுதல் முடியாது என்றாரென்க.
தொல்லைவினை - அநாதிகாலமாக
தொடர்ந்த வினைகளுமாம். ‘இவ்வென வுரைத்துமென்று நினைப்பினும் பனிக்கு முள்ளம்‘
(சீவக. 2762) என்றது, ஈண்டு அறியத் தகும்.
290. |
எண்ணமி லிசோதரனொ டன்னையிவர்
முன்னாள் |
|
கண்ணிய வுயிர்க்கொலை வினைக்கொடுமை
யாலே |
|
நண்ணிய விலங்கிடை நடுங்கஞர்
தொடர்ந்த |
|
வண்ணமிது வடிவமிவை வளரொளிய பூணோய். |
(இ-ள்.)
வளர் ஒளிய பூணோய் - மிக்க ஒளியுடையனவாகிய அணிகளை அணிந்த அரசே ! எண்ணம்
இல் இசோதரனோடு அன்னை இவர் - ஆராய்தல் இல்லாத யசோதரனும்சந்திரமதியும் ஆகிய
இவர்கள், முன்னாள் - முன்னாளில், கண்ணிய உயிர்க்கொலை - உயிரென்று கருதிச் செய்த
உயிருருவப் பலியினது, வினைக்கொடுமையாலே - கொடிய தீவினையினால், நண்ணிய விலங்கு
இடை - (அவ்விருவரும்) அடைந்த விலங்குகதியினிடத்தே, நடுங்கு அஞர் தொடர்ந்த வண்ணம்
இது - நடுங்கத் தக்க துன்பங்கள் பற்றிய தன்மை இதுவாகும்: வடிவம் இவை - (அவர்கள்
எடுத்த) வடிவங்கள் இவையாகும். (எ-று.)
மன்னனும் தாயும் மாரிக்குப் பலியிட்ட
தீவினையால் எய்திய துன்பங்களும் பிறவிகளும் அவையாகும் என்றனர் என்க. மேல் இரண்டு
பாட்டுக்களில் கூறும் பிறப்புகளி்ன் வடிவங்களைத் தொகுத்து, ‘வடிவமிவை‘ என்று சுட்டினார்.
|