291. |
மன்னன் மயிலாய்மயிரி முள்ளெயின
மீனாய் |
|
பின்னிருமு றைத்தகரு மாகியவ னேகி |
|
மன்னுசிறை வாரணம தாகிவத மருவி |
|
மன்னவநின் மகனபய னாகிவளர் கின்றான். |
(இ-ள்.)
மன்னவ- (யசோமதி) வேந்தே, மன்னன் - யசோதர வரசன், மயில் ஆய் - ஆண்மயிலாயும்,
முள்மயிரி எயினம் - முடபோன்ற மயிரையுடையதாகிய பன்றி (முள்ளம்பன்றி) யாயும்,
மீன் ஆய் - மீனாயும், பின் இருமுறை தகரும்ஆகி அவன் - பின்னர் இரண்டு தடவை ஆடாயும்
பிறந்தவன், ஏகி - (அதனின்றும்) போய், மன்னு சிறைவாரணமது ஆகி - பொருந்திய சிறகுகளையுடைய
கோழியாகி (அப்பிறவியில்), வதம் மருவி - (தன் சக்திக்குத்தக்கவாறு) விரதங்களை
ஏற்று, (அதனால் இப்பொழுது), நின் மகன் அபயன் ஆகி - உன் மகனான அபயருசியாகி, வளர்கின்றான்
- --, (எ-று.)
யசோதரன், மயில் முதலிய பிறவிகளை
யெய்தி ஈண்டு அபயருசி யாயினா னென்க.
வாரணம் அது, ‘அது‘பகுதிப் பொருள்
விகுதி. மயிரி-மயிரையுடையது: மயிரிமுள் எயினம் என்றது முள்ளம் பன்றியை.
292. |
சந்திரமுன் மதிஞமலி நாகமொ டிடங்கர்
|
|
வந்துமறி மயிடமுடன் வாரணமு மாகி |
|
முந்தைவினை நெகிழமுனி மொழியும்வத
மருவி |
|
வந்துன்மக ளபயமதி யாகிவளர் கின்றாள். |
(இ-ள்.)
சந்திரமுன்மதி - சந்திரமதியும். ஞமலி நாகமொடு இடங்கர் வந்து
- நாயும் கரும்பாம்பும் முதலையுமாகப் பிறந்து, (பின்), மறி - பெண் ஆடாயும், மயிடம்
உடன் - எருமையாயும் பிறந்ததனோடு, வாரணம் உம் ஆகி-கோழியுமாகி, முந்தை வினை
நெகிழ - பழைய தீவினைகள்தளர, முனி மொழியும் வதம் மருவி - அகம்பன முனிவர் மொழிந்த
விரதங்களை ஏற்று, வந்து - (அந்நல்வினையால்) வந்து, உன்மகள் அபயமதி ஆகி - உன்
மகளாகிய அபயமதியாகப் பிறந்து, வளர்கின்றாள்- --. (எ-று.)
|