- 304 -

சந்திரமதியும் இப்போது அபயமதியாயினா ளென்க.

உடன் என்பதைத் தனியே பிரித்து,  தன்மகன் பிறந்துள்ள வராணத்தோடு என்றும் பொருள் கூறலாம்.  முனி - சண்டகருமனுக்குக் கோழிகளின் பிறப்பைக் கூறியவர்.

293.  இதுநுமர்கள் பவம்வினை1 கள் விளையுமியல் பிதுவென்
  றெதுவின்முனி யருளுமொழி யவையவைகள் நினையா
  விதுவிதுவி திர்த்தக2 நெகிழ்ந்துமிகை சோரா3
  மதுமலர்கொள்4 மணிமுடிய மன்னவன் மருண்டான்.

(இ-ள்.) மது மலர்கொள் மணி முடிய மன்னவன் - தேனுள்ள மலர்புனைந்த ரத்ன கிரீடத்தையுடைய யசோமதியரசன், ‘நுமர்கள் பவம் இது - முன்னோ ரெய்தியபிறவி வகை இது,  வினைகள் விளையும் இயல்பு இது- இரு வினைகளால் பயன்தரும் தன்மை இதுவாகும்’, என்று --, எது இல் முனி அருளும் மொழி - (விருப்பு வெறுப்பு) யாதும் இல்லாத சுதத்தமுனிவர் அருளிய மொழிகளால், அவை அவை நினையா - தன் பெற்றோர் முதலியோர் அடைந்த அவ்வப் பிறப்புக்களை நினைத்து,  விதுவிது விதிர்த்து - மிக்க துக்கத்தால் நடுநடுங்கி,  அகம் நெகிழ்ந்து - மனம் இளகி, மிகை சோரா - மிகுதியாய்ச் சோர்ந்து, மருண்டான் - மயக்க மெய்தினான்.  (எ-று.)

அரசன், முனிவர் கூறியதை எண்ணி நடுநடுங்கிச் சோர்ந்து திகைப்புற்றானென்க.

‘அவையவைகள்’ என்றது, யசோமதியின் தாய் நரகில் வருந்துதலையும், தந்தையும் பாட்டியும் இழிபிறவிகள் பலவற்றில் பிறந்ததனையும் குறித்தது.  நுமர் - நும்தமர்: முன்னோர். ‘பவம’ என்பதில் உள்ள மகரமெய், குறுக்கம்:  கால் மாத்திரை யளவில் ஒலிக்கும்.  எதுவும் இல்என்பதில் உள்ள உம்மை தொக்கது.  இனி, ஏது என்பது எது என்று குறுகி

 

1 பவவினை.

2 விதிர்ந்தக.

3 மிகசோர,

4 மதுமலர.