நின்றதாகக் கொண்டு, ‘முனி ஏதுவின்
அருளும் மொழி‘ என்று கூட்டிப் பொருள் கூறலும் ஆம். ஏது - ஹேது. விதிர்வு - நடுக்கம்:
விதுவிதுப்பு - இரட்டைக் கிளவி. நெகிழ்தல். தளர்தல் ; இளகுதல்.
294. |
ஆங்கபய வுருசியுட னபயமதி தானுந் |
|
தாங்கலர்கள் சென்றுதவ வரசனரு
ளாலே |
|
நீங்கிய பவங்களை நினைந்தன ருணர்ந்தார் |
|
ஆங்கவர்க ளுறுகவலை யாவர்பிற ரறிவார். |
(இ-ள்.)
ஆங்கு - அம்முனிவரிடத்தே, அபயவுருசியுடன் அபயமதியும் - --, தாங்கலர்கள் சென்று -(நிகழ்ந்த
வரலாறு அனைத்தையும் தூதுவர்மூலம் அறிந்து துன்பத்தைத்) தாங்க முடியாதவர்களாய்ச் சென்று,
தவ அரசன் அருளால் - தவத்தோர்கட்குத் தலைவராகிய சுதத்தாசார்யரை வணங்கி அவர்
கூறியருளிய அறவுரையால், நீங்கியபவங்களை - (தாங்கள் துய்த்தலாற்) கழிந்த பிறவிகளை,
ஆங்கு - அப்பொழுது (தமக்கெய்திய பழம்பிறப்புணர்வால்), நினைந்தனர் உணர்ந்தார்
- நினைந்து உணர்ந்தனர் (அதனால்), அவர்கள் - அவ்விருவரும், உறும் கவலை-உற்ற
துன்பத்தை, யாவர் பிறர் அறிவார் - (இறைவனே யன்றி) அறியவல்லவர் வேறு யாவருளர்?
(எவருமில்லை): (எ-று.)
அபயருசியும் அபயமதியும், பழம்பிறப்
புணர்வினால் தங்கள் பிறப்பை அறிந்து அஞ்சி வருந்தினரென்க.
வினைப்பகையை செல்லும் தவத்தரசனுமாம்.
தான், சாரியை. ஏ - அசை.
(75)
295. |
தந்தையும் தந்தை தாயு மாகிய தழுவு
காதல் |
|
மைந்தனு மடந்தை தானு மாற்றிடைச்
சுழன்ற பெற்றி |
|
சிந்தையி னினைந்து நொந்து தேம்பினர்
புலம்பக் கண்டு |
|
கொந்தெரியழலுள் வீழ்ந்த கொள்கையன்மன்ன
னானான். |
(இ-ள்.)
மன்னன் - யசோமதி, தந்தையும் - (தனக்குத்) தந்தையும், தந்தை
தாயும் ஆகிய - தந்தைக்குத் தாயுமாயிருந்த, காதல் தழுவும் மைந்தன்உம் மடந்தைஉம்
- அன்பினால் தழுவுகின்ற புதல்வனும் புதல்வியும் (அபய
|