ருசியும் அபயமதியும்), மாற்றிடை
சுழன்ற பெற்றி - (பல) பிறவியில் உழன்ற தன்மையை, சிந்தையில் நினைந்து நொந்து
- மனத்தில் எண்ணி வருந்தி, தேம்பினர் புலம்ப- விம்மியழுது புலம்ப, கண்டு - பார்த்து,
கொந்து எரிஅழலுள் வீழ்ந்த கொள்கையன் ஆனான் - மூண்டு எரிகின்ற தீயில் வீழ்ந்த
செயலையுடையனாயினான். (எ-று.)
தம் மக்கள் பழம்பிறப்புணர்ந்து வருந்துதலைக் கண்ட அரசன்
மிக்க துயரெய்தினானென்க.
முக்திக்கு மாறாகியது, ‘மாற்று‘ (பிறவி) எனப்படும்.
296. |
எந்தையு மெந்தை தாயு மெய்திய
பிறவி தோறும |
|
வெந்துயர் விளைவு செய்த வினையினே
னென்செய் கேனோ |
|
அந்தமி லுயிர்கள் மாய வலைபல
செய்து நாளும் [கேனோ. |
|
வெந்துயர் நரகின் வீழ்க்கும்
வினைசெய்தே னென்செய். |
(இ-ள்.)
எந்தையும் எந்தை தாயும் எய்திய - என் தந்தையும் அவன் தாயும் அடைந்த, பிறவிதோறும்
- மயில் முதலிய ஒவ்வொரு பிறவியிலும், வெம் துயர் விளைவுசெய்த-(அவர்களுக்குக்) கொடுந்துன்பஞ்செய்த,
வினையினேன் -தீவினையாளனாகிய யான், என்செய்கேனோ - உய்வதற்குயாது செய்வேன் !
அந்தம் இல் உயிர்கள் - எண்ணுதற்கு முடியாத பிராணிகள், மாய - மடிய, நாளும் - எந்நாளும்,
அலை பல செய்து - கொலை முதலிய பல தீயசெயல் புரிந்து, வெம் துயர் நரகின் வீழ்க்கும்
வினைசெய்தேன் - கொடிய துன்பம்தரும் நரகத்தில் வீழ்த்தும் தீவினைகள் செய்தயான்,
என் செய்கேனோ - இனி யென்செய்வேனோ ! (எ-று.)
யசோமதி தன் செயலைக் குறித்து வருந்தினானென்க.
எந்தை
- என்தந்தை. நாய், மீன் முதலிய பிறவிகளில் துன்புறுத்தியதனை நினைத்து, ‘எந்தையும்...
வினையினேன்‘ என்றான். அலைத்தல் - வருத்துதல். தான்செய்த தீவினை நரகத்திற்கேதுவாகு
மென்று எண்ணி மிகவருந்தினான்.
297. |
அருளொடு படர்தல் செய்யா தாருயிர்க்
கழிவு செய்தே |
|
பொருளோடு போக மேவிப் பொறியிலே
னென்செய் கேனோ |
|