பக்க எண்: - 307 -


  அருளின துருவ மாய வடிகணும் மடிகட் கேயுந்
  தெருளல னினைந்த தீமைச் சிறியனே னென்செய் கேனோ.

 (இ-ள்.) அருளொடு படர்தல் செய்யாது - (உயிர்களிடம்) அருளோடு நடக்காமல், பொருளொடு போகம் மேவி - பொருளையும் போகத்தையும் விரும்பி, ஆர் உயிர்க்கு அழிவுசெய்து - உயிர்களை வதைத்து(த் தீவினையெய்தி), பொறி இலேன் - நல்லூழ் இல்லாத யான், என் செய்கேனோ - யாது செய்வேனோ! அருளினது உருவம் ஆய அடிகள் - கருணையே வடிவா யமைந்த சுவாமியே! நும் அடிகட்கேயும் - நும் திருவடிகளுக்கும்.  தெருளலன் தீமை நினைந்த சிறியனேன் - தெளிவில்லாமல் தீங்கு நினைந்த அற்ப அறிவினேனாகிய யான், என் செய்கேனோ:-!

உயிர்களைக் கொன்று உமக்கும் இன்னல் நினைந்த யான் உய்யுமாறு எங்ஙனமென்று யசோமதி வருந்தினானென்க.

அறம் பொருள் இன்பம் இம்மூன்றிலும் நெறிமாறிக் கருணையின்றி உயிர்க்கு அழிவுசெய்தவ னாகலின், ‘அருளொடு... பொறியிலேன், என்றான்.  பொறி - பூர்வ புண்ணியமுமாம், கொல்லச் சூழ்ந்த தன்னையும் உய்யக் கொண்டாராதலின், ‘அருளின துருவமாய அடிகள்‘ என்றான். ‘இன்னா செய்தார்க்கு மினியவே செய்யாக்கால், என்ன பயத்ததோ சால்பு‘ என்பது மறை.  (குறள். 987). நினைந்த தீமை - வடமொழி நடை.                      (78)

298. மாவியல் வடிவு தன்னை வதைசெய்தார் வண்ண மீதே
  ஆவினி யளிய னேது மஞ்சிலே னவதி யென்கொல் [ல்
  காவல வருளு கென்னக் கலங்கின னரசன் வீழ
  மாவல வஞ்ச லென்றம் மாதவ னுரைவ ளர்த்தான்.

(இ-ள்.) அரசன்  - யசோமதி, காவல - அடியேனை ரக்ஷித்தவரே, மா இயல் வடிவு தன்னை - மாவினால்செய்த கோழியினை,  வதைசெய்தார் வண்ணம் ஈது ஏல் - பலியிட்டவர் அடைந்த தன்மை இதுவாயின்,  ஆ - ஐயோ! அளியன் ஏதும் அஞ்சிலேன் - இரங்கத்தக்க அடியேன் சிறிதும் அஞ்சினேனில்லை:  இனி அவதி என் கொல் - (யான்)  இனி