303. |
ஓருயிர்த் தோழ னாகி யுறுதிசூழ்
வணிகள் றன்னை |
|
ஆருயிர்க் கரண மாய வடிகளோ டைய
நீயும் |
|
நேரெனக் கிறைவ னாக நினைவலென்
றினிய கூறிப் |
|
பாரியற்பொறையை நெஞ்சிற் பரிந்தனன்மன்னனானான். |
(இ-ள்.)
மன்னன் - யசோமதி யரசன், ஓர் உயிர்த்தோழன் ஆகி - தனக்கு ஒப்பில்லாத உயிர்த்தோழனாகி,
உறுதி சூழ் வணிகன்தன்னை - நன்மையை ஆராய்ந்து உரைத்த வணிகனை நோக்கி, ஐய
- ஐயனே, எனக்கு-அறிவிலியாகிய எனக்கு, ஆர் உயிர்க்கு அரணம் ஆயஅடிகளோடு-உயிர்கட்கு
இரட்சகராகிய இம்முனிவரோடு, நீயும் - ----, நேர் - சமம்: இறைவனாக நினைவல்
- (உன்னையும்) ஆசார்யனாகவே நினைப்பேன், என்று - --, இனிய கூறி - இனிய மொழிகளைக்
கூறி, பார் இயல் பொறையை - நிலத்தைச் சார்ந்த அரசபாரத்தினை, நெஞ்சில் - மனத்தில்,
பரிந்தனன் ஆனான் - பற்றின்றி விட்டவனானான். (எ-று.)
நண்பனைப் புகழ்ந்து துறவு கொள்ளக் கருதினானென்க.
உயிர்த்தோழன் - உடலால் இருவராயினும் உயிரால் ஒருவரேயெனக்
கூறத் தக்க நண்பன். உறுதி சூழ்தல் - நல்லறத்தை ஆராய்ந்து கூறுதல். இறைவன் -
ஞானசிரியன். நினைவல்: ‘அல்‘ தன்மை யொருமை விகுதி.
(84)
304. |
மணிமுடி மகனுக் கீந்து மன்னவன்
றன்னோ டேனை |
|
யணிமுடி யரசர் தாமு மவனுயிர்த்
துணைவ னாய |
|
வணிகனு மற்று ளாரு மாதவத் திறையை
வாழ்த்தித் |
|
துணிவனர் துறந்து மூவார் தொழுதெழு
முருவங்கொண்டார். |
(இ-ள்.)
மன்னவன் - யசோமதி , மணிமுடி - ரத்னகிரீடத்தை [அரச பதவியை], மகனுக்கு ஈந்து -
தன் புதல்வனாகிய அபயருசிக்குக் கொடுத்ததனால், தன்னோடு - அவனோடு, ஏனை அணிமுடி
அரசர்தாமும் - அழகிய முடியணிந்த மற்ற அரசர்களும், அவன் உயிர்த துணைவன் ஆய - அவனுக்கு
உயிர்த்தோழனாகிய, வணிகனும் - கல்யாண மித்திரனென்னும் வணிகனும், மற்றுளாரும்
- மற்றும் பலரும், மாதவத்து இறையை
|