வாழ்த்தி - தவவேந்தராகிய சுதத்தமுனிவரைத் துதித்து,
துணிவினர் - துணிவுடையவராய், துறந்து -அகப்பற்று புறப்பற்றுக்களை நீக்கி, மூவார்
தொழுது எழும் - தேவரும் வணங்கி யெழும், உருவம் கொண்டார். (திகம்பர) வடிவத்தை
மேற்கொண்டார். (எ-று.)
யசோமதியும் மற்றும் பலரும் தீக்ஷைகொண்டாரென்க.
உறுதி சூழ்ந்தவனாதலின் உயிர்த்தோழனென்றார். மூவார்:
மூப்பு அடையாதவர்: தேவர் ‘மூவார் தொழு தெழும் வடிவங்கொண்டார்’ என்று (மேரு. 874) வாமன முனிவரும், ‘மூவா வமரர’ என்று (சீவக 3036) திருத்தக்க தேவரும் கூறியனவறிக. துணிவினர்
- குறிப்புமுற்றெச்சம்.
305. |
தாதைதன் துறவு முற்றத் தானுடன்
பட்ட தல்லால |
|
ஓதநீர் வட்டந்தன்னை யொருதுகள்
போல வுள்ளத் |
|
தாதரம் பண்ணல் செல்லா வபயனு
மரசு தன்னைக் |
|
காதலன் குமரன் றம்பி கைப்படுத்
தனன்வி டுத்தான். |
(இ-ள்.)
தாதைதன் துறவு முற்றத் தான் உடன்பட்டது அல்லால் - தன் தந்தையின் துறவு நிறை வேறுவதற்காகத்
தான் அரசியலை ஏற்க உடன்பட்டதே யன்றி, ஓதம் நீர் வட்டந்தன்னை - கடல் சூழ்ந்த
பூமி முழுவதையும், உள்ளத்து ஒருதுகள்போல ஆதரம் பண்ணல் செல்லா அபயனும் - மனத்தில்
ஒரு தூளுக்குச் சம மென்றெண்ணி அதில் பற்றிலனாகிய அபயருசியும், அரசு தன்னை - அரசியலை,
காதலன் குமரன் தம்பி கைப்படுத்தனன் விடுத்தான் - காதல் மிக்க இளையோனாகிய தம்பியினிடம்
ஒப்புவித்துத் தன் பொறையை நீக்கினான். (எ-று.)
அயயருசி, தம்பிக்கு அரசளித்துத் துறவு மேற்கொண்டானென்க.
ஒதம் - குளிர்ச்சி: ஓத நீர் - கடல். கைப்படுத்தல்,
உலக வழக்கு. துறவு முந்த என்றும் பாடம். (86)
306. |
மாதவன் மலர்ந்த சொல்லான் மைந்தனும்
மங்கை யாய |
|
பேதையும் பிணைய னாளும் பிறப்பினி
துணர்ந்த பின்னர் |
|