|
ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர்
நெஞ்சி னஞ்சாய் |
|
மாதவன் சரண மாக வனமது துன்னி
னாரே. |
(இ-ள்.)
மாதவன் - சுதத்த முனிவர், மலர்ந்த சொல்லால் - திருவாய் மலர்ந்து அருளிய உரையால்,
மைந்தனும்-அபயருசியும், மங்கைஆய பேதை அம் பிணைஅனாளும் -அபயமதியும், பிறப்பு -
தங்கள் பழம்பிறப்பு வகைகளை, இனிது - நன்றாக, உணர்ந்த பின்னர் - --, நெஞ்சில்
- தம்மனத்தில், போகத்து ஆதரம் பண்ணல் - போகப்பொருள்களினிடத்து விருப்பங் கொள்ளுதலை,
நஞ்சாய் அஞ்சினர் - விஷயமாகக் கருதி அஞ்சினவர்களாய், மாதவன் சரணம் ஆக - அந்த
முனிவரையே தமக்குப் புகலாகக் கருதி, வனம் அதுதுன்னினார் - (அம்முனிவரரிருந்த) வனத்தை
நண்ணினார்.
இளைஞர் துறவு மேற்கொள்ள வனம் ஏகின ரென்க.
பேதை - அறிந்தும் அறியாததுபோல் இருக்குந்தன்மை. பேதையாய
மங்கை என்க. மங்கை, பருவப்பெயர். பிணையனாள் - பெண்மான் பார்வைபோலும் மருண்ட
பார்வையுடையாள். மாதவன் - சிறந்த தவத்தோன்: சுதத்தாசார்யர் ‘நல்வினை விளையு
ளென்னு நஞ்சு‘ (சீவக, 2985) என்பதை ஈண்டு ஒப்பு நோக்குக. துன்னுதல் - சேர்தல்.
(87)
307. |
வினைகளும் வினைக டம்மால் விளைபயன்
வெறுப்பு மேவித் |
|
தனசர ணணையு ளார்க்குத் தவவர சருளத்
தாழ்ந்து |
|
வினையின விளைவு தம்மை வெருவின
மடிகள் மெய்யே |
|
சினவரன் சரண மூழ்கிச் செறிதவம்
படர்து மென்றார். |
(இ-ள்.) (இளைஞ
ரிருவரும்), வினைகளும் வினைகள் தம்மால் விளைபயன் - வினைகளும் அவ்வினைகளால் விளையும்
பயனும் ஆகிய இவைகளில், வெறுப்பு மேவி - வெறுப்படைந்து, தனசரண் அணையுளார்க்கு - தன்
பாதங்களையே ஆதாரமாகவுடைய சங்கங்களுக்கு, தவ அரசு அருள - தவ வேந்தராகிய சுதத்தமுனிவர்
அறவுரை புகலுங்கால் (அங்குச் சென்று), தாழ்ந்து - வணங்கி, அடிகள் - எம்பெருமானே ! வினையின
விளைவு தம்மை வெருவினம் - வினைகளினுடைய துன்பப் பயன்களை அஞ்சினோம், மெய்யே
|