11. ஆதீனக் கோயில்கள் பலவற்றில் நூலகங்கள்
அமைத்தும் மாலைநேரத்தில் ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு குழந்தைகட்குத் திருமுறை
வகுப்புக்கள் நடத்தியும் உதவுவது. |
12.
சமய நூல்களை ஆய்வு நோக்கோடு எழுதி வெளியிட முன்வருவோர்க்கு உதவுவது. |
13.
ஆதீனத்திருக்கோயில்களில் பழுதடைந்த கட்டிடப் பகுதிகளை இடித்துப் புதுப்பித்தும்
12 ஆண்டுகட்கு ஒருமுறை மூர்த்திகட்கு அஷ்டபந்தனம் சாத்தியும் திருக்குட நீராட்டு
விழா நடத்துவது. |
14.
ஆதீனத் திருமடத்தில் பெரியதொரு நூலகம் அமைத்துப் பழைமையான ஓலைச்சுவடிகளையும்
நூல்களையும் பேணி வருவது. |
15.
கல்வி பயிலும் ஏழை மாணவர்கட்குக் கல்விக் கட்டணம் புத்தகங்கள் வழங்கி
உதவுவது. |
16.
மயிலாடுதுறையில் மகப்பேறு மருத்துவ நிலையம் அமைத்து நகராட்சிக்கு உதவியதுபோலச்
சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை சென்னை அடையாறு கான்சர் இன்ஸ்டியூட்
போன்ற பொது நிறுவனங்களுக்கும் பெருந்தொகை உதவி வருவது. |
17.
ஆதீனக் குரு முதல்வர் குரு பூசைவிழாவில் சமய வகுப்புக்கள் கருத்தரங்குகள் திருநெறிய
தெய்வத் தமிழ் மாநாடு முதலியன நடத்திவருவது. |
18.
அவ்வப்போது மக்கட்கு எல்லாச் சமய தத்துவங்களையும் மாநாடுகள் மூலம் உணர்த்திப்
பொதுவாக அனைத்துச் சமய தத்துவங்களையும் மக்கள் அறியும்படிச் செய்வது. |
19.
தமிழ்நாட்டின் தலைநகராகிய சென்னையில் சமயப் பிரசார நிலையம் அமைத்துச் சமய
வகுப்புக்கள் நடத்தியும், ஆதீனத்திருக்கோயில்களில் நிகழும் சிறப்பு
விழாக்களின் பிரசாதங்களை அங்குள்ள மக்கட்கு வழங்கியும் வருவது. |
20. திங்கள்
தோறும் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் பொதுமக்கட்கு
அருளாசி வழங்குவது. |
21. திருவாமூரில்
அப்பருக்குத் திருக்கோயில் எடுப்பித்துத் |