உ
சிவமயம்
|
மதிப்புரைகள்
|
திருவாவடுதுறை
யாதீனம் ஸ்ரீமத் - நமசிவாயத் தம்பிரான் சுவாமிகள்
|
மகாபுருஷ செல்வச் சிரஞ்சீவி நமது சுப்ரமண்ய முதலியாரவர்களுக்கு
சுவாமி அம்பலவாண சுவாமி கிருபையால் சகல சம்பத்தும் மென்மேலும்
பெருக உண்டாக ஆசீர்வாதம்.
|
திருவருளால்
இவண் சுபம். தங்கள் க்ஷேமத்தையறியப்
பேரவாவுடையேம். தாங்களனுப்பிய பெரியபுராணவுரை வந்து சேர்ந்தது.
சொற்சுவை பொருட்சுவைகளை ஆர அருந்தி இன்புறுகின்றோம். தமிழ்
உலகிற்கு ஓர் பெரும் விருந்தே.
|
சூரியனார் கோயிலாதீனம்
ஸ்ரீமத் - முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் அருளிய
|
ஆசியுரை
|
பொன்னலரிதழி
யணிசடைக் கூத்தர் புனிதவாய் மலர்ந்தருள் செய்த
மன்னரு "ளுலகெ லா"மெனு முதலே மருவிட முதலிடை கடையும்
துன்னக விருடீர்ந் துயிரெலாம் வாழத் தூயசெந் தமிழ்க்குறை நீங்கப்
பன்னருந் தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடிய திருத்தொண்டர் புராணம். 1
|
வாழிமா மறையின்
மெய்ப்பய னாகி வளர்பெருஞ் சைவசித் தாந்தக்
கேழிலா நெறியி னநுபவப் பேறு கிடைத்துய ரளவிலாப் பெரியார்
பாழிமால் விடையோ னருள்வழிப் படர்ந்த பண்பொடு சரிதமும் விரித்தே
ஆழியா ரமுதின் மிகுசுவை யுடைத்தா யருந்தவர் விருந்துமா யினதே. 2
|
உரைத்தவர் நூலின்
பெருமையா ருணர்வா ரோங்குமா பதியுமா பதியாய்த்
தரைத்தவ முடைய ததியினோர் தேறத் தருவர லாறுபெற் றிலமேல்;
திரைத்தரு கடலிற் கலசமார் முறைதாந் தேர்ந்தவா றுரைகண்முன் பல்லோர்
உரைத்தனரிந்நாண் மாக்களு மந்நூற் குரைதம துளத்துள துரைத்தார். 3
|
திருத்தகு தெய்வச்
சேக்கிழார் பெருமான் றிருவுளச் சம்பிர தாயக்
கருத்திது வென்று காட்டிமேற் கோளும் கவின்பெறு சொற்பொரு ணயமும்
தெரித்துமெய்ச் சைவ நெறிமுறை விளக்கிச் சிலர்சிறு நெறியுரை மறுத்தே
அருத்தியி னறிஞ ரேற்குநல் லுரையீ தன்பினா லளித்தன னம்மா. 4
|
அப்பெருந் தகைதா
னாரெனிற் கோவைக் கணிமணி விளக்கென வோங்கும்
சுப்பிர மணிய முதலியார், பீ.ஏ., எனும் பெயர்த் தூயவன் சைவ
முப்பெருந் தீக்கை பெற்றரு ணூவின் மொழிசிவ பூசனை புரிவோன்;
இப்பரி சன்பர் பிறரையும் புரிவித் திறையருட் குரியராக் கிடுவோன்; 5
|
வேறு
|
செந்த
மிழ்ப்பு லஞ்சி றந்த செய்ய சொற்க ளாற்பிர
பந்த மாலை கட்டி யெங்கள் பட்டி நாய கர்க்கணி
|