38

இந்தவகை சிவன்செவிப்பா லெக்கண்ணுந் தழைத்தோங்க
வந்தமிலா வறுபத்து மூவரரு ளம்புவிமே
னந்தியிட மும்மலமு நல்லுலகோர் நீங்கியிடச்
சிந்தையருட் சிவமாகத் தெளிவித்தா னருட்சென்னி
44
   
சீராருந் திருமுறைகள் கண்டதிறற் பார்த்திபனா
மேராரு மிறைவனையு மெழிலாரு நம்பியையு
மாராத வன்பினுட னடிபணிந்தங் கருள்விரவச்
சோராத காதன்மிகுந் திருத்தொண்டர் பதந்துதிப்பாம்.
45

திருமுறைகண்ட புராணம் முற்றிற்று
ஆகத் திருவிருத்தம் - 46

திருப்பதிக்கோவை, திருப்பதிகக்கோவை, திருமுறைகண்ட புராணம்
எனுமிவை ஆக்கியோர் பெயரில்லாமலே பல பதிப்புக்களிற்
பதிக்கப்பட்டுள்ளன. இவை உமாபதி சிவனார் திருவாக்கல்ல என்று
கூறுவாருமுண்டு. இங்கு இறுதிப் பாட்டிலே “திருத்தொண்டர் பதந்துதிப்பாம்“
(45) என்றது திருத்தொண்டர் புராணசாரத்தினைக் குறிக்குமெனத்
தோன்றுவதால்அதன் ஆசிரியராகிய உமாபதி சிவசாரியாரே திருமுறைகண்ட
புராணமுஞ் செய்தாராவர் என்ற கொள்கை வலியுறுகின்றது.