அறுவரெவ ரவர்செங்கட்
சோழர்புகழ்ச் சோழ
ரருண்மானி யிடங்கழியார் நெடுமாறர் சேரர்;
குறுநிலமன் னவரைவர் நரசிங்க முனையர்
கூற்றுவனார் கழற்சிங்கர் மெய்ப்பொருளை யடிகள்;
முறைமைவணி கரிலைவர் காரைக்கா லம்மை
மூர்த்திகலிக் கம்பரமர் நீதியியற் பகையார்;
திறமைபுரி வேளாளர் பதின்மூவர் மூர்க்கர்
செருத்துணையார் வாயிலார் கோட்புலியார் சத்தி;
|
39 |
|
|
தாயனாரிளையான்றன்
குடிமாற ரரசு
சாக்கியர்கஞ் சாறர்விறன் மிண்டர் முனையடுவா
ரேயர்கோன் கலிக்காமர்; கோபாலர் மரபி
லிருவர் திரு மூலனா ரானாயர்; குயவர்
சேயபுகழ்ந் திருநீல கண்டனார்; பாணர்
திருமரபிற் றிருநீல கண்டத்துப் பாணர்;
மேயதிற லதிபத்தர் பரதவர்; கண்ணப்பர்
வேடர்; மர பினிற் சான்றா ரேனாதி நாதர்;
|
40 |
|
|
நேசனார் சாலியரிற்;
றிருநாளைப் போவார்
நீசமர பினி; லெங்க டிருக்குறிப்புத் தொண்டர்
தூசொலிக்கு மேகாலி மரபு; தில தயிலத்
தொழின்மர பிற்கலியனார்; மரபுகுறித் துரையாக்
காசில்கதை பதின்மூன்று குலச்சிறையார் தண்டி
கணம்புல்ல ரெறிபத்தர் காரியார் குறும்பர்
தேசுடைய பத்தர்பர மனைப்பாடு வார்கள்
சித்தத்தைச் சிவன்பால்வைத் தாராரூர்ப்
பிறந்தார்,
|
41 |
|
|
செப்பரிய பொய்யடிமை
யில்லாதார் மெய்யிற்
றிருநீறு பூசுமுனி வர்களுலகு தன்னில்
அப்பாலு மடிச்சார்ந்தா;ரிவர்கடமிற் சிலபே
ராய்ந்ததமிழ்ப் பேர்சிலபேர்; மலையாளர்
சிலபேர்;
தப்பாத தெலுங்கர்சிலர்; மற்றுளதே சத்தோர்
தவஞ்செய்து பரகதியை யடைந்தவர்கள் சிலபே;
1ரிப்போது மிருந்தரனை வழிபடுவோர் சிலபே;
ரினிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே;
|
42 |
|
|
திருஞான சம்பந்தர்
திருநாவுக் கரையர்
திருமூலர் நெடுமாறர் மங்கையருக் கரசி
கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பாணர் குறும்பர்
கணநாத ரப்பூதி சோமாசி மாற |
|
1
தொகையடியார்களில் முத்திபெற்றாரொழிய இப்போது மிருந்தரனை
வழிபடுவோரும் - இனிமேலும் வருவோருமாவார் - தில்லை வாழ்ந்தணர்,
பத்தராய்ப் பணிவார், பரமனையேபாடுவார், சித்தத்தைச்சிவன்பாலே வைத்தார்,
திருவாரூர்ப் பிறந்தார், முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார்,
முழுநீறுபூசியமுனிவர், அப்பாலு மடிச்சார்ந்தார், என்னுமிவர்களேயாம் -
ஸ்ரீமத் ஆறுமுகத் தம்பிரான் சுவாமகள் உரை. |