63

ருரைசேரு மிவர்கள்பதி னொருவர்குரு வருளா
     லுயர்முத்தி யடைந்தவர்க; ளெறிபத்தர் கலயர்
முருகனார் கண்ணப்ப ரானாயர் தாயர்
     மூர்த்தியார் சண்டேசர் திருநாளைப் போவார்,
43
   
சேரனார் சாக்கியனார் கூற்றுவனார் தண்டி
     சிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர்
காரியா ரதிபத்தர் நீலநக்கர் பூசல்
     கணம்புல்லர் கோட்புலியார் நமிநந்தி யடிகள்
சீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய
     செருத்துணையார் புகழ்த்துணையார் காடவரை யடிகண்
மூரிநெடு வேற்செங்கட் சோழனா ராக
     முப்பதுபேர் சிவலிங்கத்தான் முத்தி யடைந்தோர்;
44
   
திருநீல கண்டனா ரியற்பகையார் மூர்க்கர்
     சிறுத்தொண்டர் திருக்குறிப்புத் தொண்டர்விறன் மிண்ட
ரருள்சேரு மிடங்கழியார் முனையடுவார் சத்தி
     யமர்நீதி மெப்பொருளா ரேனாதி நாதர்
கரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர்
     காரைக்கா லம்மைநர சிங்கர்கலிக் கம்பர்
வருநேச ராகவொரு பத்தொன்ப தடியார்
     மணிவேடத் தாரைவழி பட்டரனை யடைந்தோர்;
45
   
கவுணியர்நா வுக்கரசர் பேயாரிம் மூவர்
     கற்குமிய லிசைவல்லோ;ரிசைத்தமிழ்நூல் வல்லோர்
பவமணுகாத் திருநாளைப் போவாரா னாயர்
     பாணர்பர மனைப்பாடு வாராக நால்வர்
புவனிபுக ழையடிக டிருமூலர் காரி
     பொய்யடிமை யில்லாத தமிழ்ப்புலவர் சேரர்
நவமுடைய விவரைவரியல்வல்லோர்; நின்ற
     நாயன்மார் தவம்புரிந்து நற்கதியை யடைந்தோர்,
46
   
இல்லறத்தி னின்றவர்க டிருநீல கண்ட
     ரியற்பகையா 1ருள்ளிட்டார்; மூர்த்தியார் ரப்பர்
நல்லதுற வறம்; பிரம சாரிகள்சண் டேசர்;
     நானிலத்தி லரனடியார் தங்களுடன் சேர்ந்து
செல்கதிபெற் றவர்ஞான சம்பந்த ருடனே
     திருமணத்தி லொருமணமாய்ச் சேர்ந்தவர்க ளனேகர்,
பல்வளஞ்சே ராரூர ருடன்சேரர் கையிற்
     பரியுகைக்க வுடன்சென்ற பரிசனமெண் ணிறந்தோர்;
47
   
சிவனடியா ருடன்பகையாய் முத்தியடைந் தவர்கள்
     சேய்ஞலூர்ச் சண்டேசர் பிதாவெச்ச தத்தன்
கவர்புகழ்சேர் கோட்புலியா ருரைத்த“திரு விரையாக்
     கலி“பிழைத்த கிளை; பகைத்து நரகினைச் சென்
                                       றடைந்தோர்
 

1 தனியடியார்களில் பிரமசரியத்தும் துறவறத்தும் நின்ற மூவர் நீக்கி
ஏனையோர் இல்லறத்தினராதலின் உள்ளிட்டார் என்றார் - ஸ்ரீமத்
ஆறுமுகத்தம்பிரான் சுவாமிகள் உரை.