தவரான மூர்த்தியா
ரிறைவனுக்குச் சாத்துஞ்
சந்தனக்காப் பினைவிலக்கி யமண்சமயச் சார்வாய்ப்
புவிபுரந்த கருநடமன் னவன்முதல னேகர்;
புராணகதை யினைப்பிரித்துப் புகலவெளி தலவே.
|
48 |
|
|
ஆரூரர் திருத்தொண்டத்
தொகையுரைத்த நாளி
லடித்தொண்டு செய்தொண்டர் சில; ரவர்க்கு
முன்னே
பேரூர்மெய்த் தொண்டுசெய்த பேர்சிலபே; ரவர்க்குப்
பிறகுதிருத் தொண்டுசெயும் பேர்சிலபே; ராகச்
சீரூருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்துச்
சேவையர்கோன் சேவைசெயுந் தொண்டரள விறந்தோர்;
காரூரு மணிகண்டர்க் கவர்கள் செய்த
கைத்தொண்டி னிலைகரைகண் டுரைக்கவெளி தலவே.
|
49 |
|
|
ஒருலகோ? வொருதிசையோ?
வொருபதியோ? தம்மி
லொருமரபோ? வொருபெயரோ? வொருகாலந் தானோ?
பேருலகி 1லொருமைநெறி தருங்கதையோ? பன்மைப்
பெருங்கதையோ? பேரொன்றோ? வல்லவே யிதனை
யேருலகெ லாமுணர்ந்தோ தற்கரிய வன்னென்
றிறைவன்முத லடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு
பாருலகி னாமகணின் றெடுத்துக்கை நீட்டப்
பாடிமுடித் தனர்தொண்டர் சீர்பரவ வல்லார்.
|
50 |
|
|
கருங்கடலைக்
கைநீத்துக் கொளவெளிது; முந்நீர்க்
கடற்கரையி னொய்மணலை யெண்ணியள விடலாம்;
பெருங்கடன்மேல் வருந்திரையை யொன்றிரண்டென் றெண்ணிப்
பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்துவிட
லாகுந்;
தருங்கடலின் மீனையள விடலாகும்; வானத்
தாரகையை யளவிடலாஞ்; சங்கரன்றா டமது
சிரங்கொடிருத் தொண்டர்புரா ணத்தையள விடநஞ்
சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கு மரிதே!.
|
51 |
|
|
அறுபதுபேர் தனித்திருப்பேர்;
திருக்கூட்ட மொன்ப;
தாகவறு பத்தொன்ப தரனடியார் கதையை
மருவிறிரு நாவலூர்ச் சிவமறையோர் குலத்து
வருசடைய னார்மனைவி யிசைஞானி வயிற்றி
லுறுதிபெற வவதரித்த வாரூரர் முன்னா
ளுரைசெய்த திருத்தொண்டத் தொகைப்பதிகத்
தடைவே
நறைமலிபூம் பொழில்புடைசூழ் திருநாரை யூரி
னம்பியாண் டார்திருவந் தாதிகடைப் பிடித்து,
|
52 |
|
|
காண்டமீரண்
டாவகுத்துக், கதைப்பரப்பைத் தொகுத்துக்,
கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்,
டீண்டுரைத்த புராணத்திற் றிருவிருத்த நாலா
யிரத்திருநூற் றைம்பத்து மூன்றாக வமைத்துச்,
|
|