குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன் பொற்றி ரண்மணிக் கமலக்கண் மலரும் பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே. - நம்பி - புன்கூர் - 4 4. | அணிகொ ளாடையம் பூணணி மாலை யமுது செய்தமு தம்பெறு சண்டி இணைகொ ளேழெழு நூறிரும் பனுவ லீன்ற வன்றிரு நாவினுக் கரையன் கணைகொள் கண்ணப்ப னென்றிவர் பெற்ற காத லின்னரு ளாதரித் தடைந்தேன்; திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே. |
- நம்பி - நின்றியூர் - 3 திருவிசைப்பா அல்லியம் பூம்பழனத் தாழர்நா வுக்கரசைச் செல்ல நெறிவகுத்த சேவகனே! தென்றில்லைக் கொல்லை விடையேறி! கூத்தா டரங்காகச் செல்வ நிறைந்தசிற் றம்பலமே சேர்ந்தனையே. - பூந்துருத்தி - நம்பிகாடநம்பி - கோயில் - 3 பாடலங் காரப் பரிசில்கா சருளிப் பழுத்தசெந் தமிழ்மலர் சூடி நீடலங் காரத் தெம்பெரு மக்க ணெஞ்சினு ணிறைந்துநின் றானை வேடலங் காரக் கோலத்தி னமுதைத் திருவீழி மிழலையூ ராளுங் கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக் கெழுமுதற் கெவ்விடத் தேனே. - சேந்தனார் - திருவீழிமிழலை - 12 பதினொராந் திருமுறை 1.திருத்தொண்டர் திருவந்தாதி பாசுரங்கள் மேலே புராணத் தொடக்கத்திற் றரப்பட்டுள்ளன. 2. | ‘பாடிய செந்தமி ழாற்பழங் காசு பரிசில்பெற்ற நீடிய சீர்த்திரு ஞானசம் பந்த னிறைபுகழா னேடிய பூந்திரு நாவுக் கரசோ டெழின்மிழலைக் கூடிய கூட்டத்தி னாலுள தாய்த்திக் குவலயமே. |
- நம்பியாண்டார்நம்பி - ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி - 80 3. | இலைமா டென்றிடர் பரியா; ரிந்திர னேயொத் துறுகுறை வற்றாலும் நிலையா திச்செல்வ மெனவே கருதுவர்; நீள்சன் மக்கட லிடையிற்புக் கலையார்; சென்றர னெறியா குங்கரை யண்ணப் பெறுவர்கள்; "வண்ணத்தின் சிலைமா டந்திகழ் புகழா மூருறை திருநா வுக்கர!" சென்போரே. 4 |
|