முகப்பு தொடக்கம்
முகவுரை ix

“துணங்கையஞ் செல்விக் கணங்குநொடித் தாங்கு”

(பெரும்பாண். 459)

“பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்நொடித் தாங்கு”

(கலித். 89 : 8)

“அரற்றென்பது அழுகையன்றிப் பலவுஞ்சொல்லித் தன்குறை கூறுதல்; அது காடுகெழ செல்விக்குப் பேய்கூறும் அல்லல்போல வழக்கினுள்ளோர் கூறுவன”

(தொல். மெய்ப். சூ. 11, பேர்.)

என்பவற்றாலும் அறியப்படும். இவ்வுறுப்பின் இறுதியில் நூலுட் கூறப்படும் போருக்குச் சென்ற பேயொன்று வந்து மகிழ்ச்சியோடு யாவரையும் உணவுகொள்ள அழைப்பதும், காளி நடந்தவரலாற்றைக் கூறும்படி கட்டளையிடுவதும் காணப்படும். பின்பு அமையும் உறுப்பாகிய காளிக்குக் கூளி கூறியது என்பதில் போர்வரலாறும் வெற்றியும் சொல்லப்படும். அதன்பின் வரும் களங்காட்டலில் காளி போர்க்களஞ் சென்று பேய்களுக்கு அங்குள்ளவற்றைக் காட்டுதலும், கூழ் என்னும் உறுப்பில் பேய்கள் பரணிக்கூழ் சமைத்து இட்டு உண்டு வாழ்த்துதலும் அமைக்கப்படும். இவ்வுறுப்புக்கள் இங்கே கூறப்பட்ட முறையாகஅன்றி முன்னும் பின்னும் பிறழ்ந்து அமைந்திருத்தலும் உண்டு. கூளி கூறியது என்னும் ஒன்றையன்றி ஏனையன எல்லாப் பரணிகட்கும் பொதுவாகிய உறுப்புக்களாகும்.

பாசவதைப் பரணி

பாசவதைப்பரணி யென்பது சிவஞான பாலைய தேசிகர் சார்ந்தார் பாசத்தைப் போக்கிச் சிவஞானம் அருளிய செயலை உருவக வகையில் அமைத்துப் பாசமன்னனொடு பொருது வென்றதாகப் பாடப்பெற்றது.

“தேசம் பரித்த சிவஞான தேசி கன்பார் வந்தெமது
பாசம் பறித்த திறம்பாடப் பைம்பொற் கபாடந் திறமினோ”

(தாழிசை, 57)

என்பதில் இது குறிப்பிக்கப் பட்டிருக்கின்றது.

இந்நூல், பாசத்தைப் பாசமன்னனாகவும் புல்லறிவைத் துன்மதி யென்னும் மந்திரியாகவும், காமம், கோபம், உலோபம், மோகம், அகங்காரம், மாற்சரியம் என்னும் உட்பகை ஆறையும் பாசமன்னன

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்