ஊடல் வேம்பாச்சே !

குடும்பப் பகையால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். காதலன் பகையைப் பொருட்படுத்தாமல் அவள் காட்டுக்கு வரும்பொழுது அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். “சிறிது காலம் நமது உறவை முறித்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் விபரீதம் விளையும் ” என்று எச்சரிக்கிறான்.

ஆண்: சின்னச் செருப்பு மாட்டி
சிறு கலயம் கஞ்சி கொண்டு
வருண முழி முழிச்சு
வாராளையா வடகாடு
 
பெண்: பாதை பிரிவாச்சே !
பக்கப் புளி ஒண்டாச்சே
ஊடாலே வேம்பாச்சே
உனக்கும் எனக்கும் பகையாச்சே

வட்டார வழக்கு: ஊடாலே-நடுவில்; புளி-புளிய மரம்; ஒண்டு-ஒன்று.

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம் :
தூத்துக்குடி வட்டாரம்.