முறைப்பாட்டு
சிறு மிளகாய் உறைக்கலையோ?
மாப்பிள்ளை பெண் முறையுடையவர்கள் கேலி செய்து பேசம் பேச்சுக்கள்
கொண்ட பாடல்களை முன்னர் கண்டோம். அவை நெல்லை மாவட்டத்தில் கிடைத்தவை. சேலம்
மாவட்டத்திலும் இத்தகைய பாடல்கள் பாடப்படுகின்றன.
ஆண்
:
|
தன்னந் தனியாகவே தான்
தட வழியே போற புள்ளே
தாலி கட்டப்
போறேண்டி
தடை ஒன்றும்
சொல்லாதேடி
|
பெண்
:
|
முன்கைப்
பலமுமில்லை
முகத்தில ரும்பு
மீசையி்ல்லை
நானுனக்குப்
பெண்டாட்டியா?
நாடெங்கும்
சொல்லாதேடா
|
ஆண்
:
|
சிறு கத்திரி
காய்க்கலையா?
சிறு மிளகாய்
உறைக்கலையா?
சிறு பையன் கொடுத்த பணம்
செல்லலையா உந்தனுக்கு. |
சேகரித்தவர்
:
வாழப்பாடி சந்திரன் |
இடம்
:
வாழப்பாடி,சேலம். |
|