முறைப்பாட்டு
சிறு மிளகாய் உறைக்கலையோ?

மாப்பிள்ளை பெண் முறையுடையவர்கள் கேலி செய்து பேசம் பேச்சுக்கள் கொண்ட பாடல்களை முன்னர் கண்டோம். அவை நெல்லை மாவட்டத்தில் கிடைத்தவை. சேலம் மாவட்டத்திலும் இத்தகைய பாடல்கள் பாடப்படுகின்றன.

ஆண் : தன்னந் தனியாகவே தான்
தட வழியே போற புள்ளே
தாலி கட்டப் போறேண்டி
தடை ஒன்றும் சொல்லாதேடி
 
பெண் : முன்கைப் பலமுமில்லை
முகத்தில ரும்பு மீசையி்ல்லை
நானுனக்குப் பெண்டாட்டியா?
நாடெங்கும் சொல்லாதேடா
 
ஆண் : சிறு கத்திரி காய்க்கலையா?
சிறு மிளகாய் உறைக்கலையா?
சிறு பையன் கொடுத்த பணம்
செல்லலையா உந்தனுக்கு.

 

சேகரித்தவர் :
வாழப்பாடி சந்திரன்

இடம் :
வாழப்பாடி,சேலம்.