பாவாணர் நூல்களின் தாக்கம் எங்கே? இன்றும்
அவருடைய ஏக்கம் அப்படியே நிற்கிறது.
பாவாணர்க்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. மறைமலையடிகளார் காலத்தில்
‘தனித்தமிழ் இயக்கம்‘ தொடங்கப்பட்டுப் பல நண்பர்கள் தங்கள் பெயர்களை
மாற்றிக்கொண்டனர். ‘க.ப.சந்தோஷம்‘ மகிழ்நன் ஆனார். நெடுஞ்செழியன், செழியன்,
அன்பழகன், அரங்கண்ணல், புலமைப்பித்தன், தமிழ்க்குடிமகன் என்று பல பெயர்கள்
மாற்றம் பெற்றதால் ஏற்றம் பெற்றன. ஆனால் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் தாக்கத்தை
உண்டாக்க முடிந்தது. ஆனால், பாவாணர் காலத்தில் அப்படியில்லை. ‘உலகத் தமிழ்க்
கழகம்‘ எனும் அமைப்புத் தொடங்கப்பட்டபோது உறுப்பினர் அனைவரும் தனித்தமிழ்ப்
பெயர் தாங்கத் தொடங்கினர். |