xvii |
பாவாணரைப் போற்றும் பார் |
இப்படி எண்ணற்ற சிதறல்கள்,
சிதைவுகள், சின்னபின்னமான நிலைகள். இவற்றை எப்படிச் சரிப்படுத்தப்
போகிறோம்? |
மற்றொன்று, பாவாணரின் வாழ்நாள்
குறிக்கோளாகிய ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி‘. |
8.5.1974-ல் ‘செ.சொ.பி. அகரமுதலித்
திட்ட இயக்ககம்‘ தொடங்கப்பட்டது. பாவாணர் அதன் இயக்குநரானார். ஆனால்
16.1.1981-ல் அவர் மறைவு நிகழ்ந்தது. இந்தக் காலகட்டத்துக்குள் அகரம் தொடங்கி
‘ஆசைமொழி‘ வரை மட்டுமே அவரால் எழுத முடிந்தது. அந்த நூலும் 1985-ல் தான் வந்தது. |
1992இல் அடுத்த தொகுதி. எனினும்
2001-க்குள் மேலும் இரண்டு மூன்று தொகுதிகள் வந்துவிட்டன. விரைவில் ‘த‘ வரையிலான
தொகுதிகள் வெளியிடப்படக்கூடிய ஏற்பாடுகள் முடிந்திருக்கின்றன. |
இதில் எனக்கு இரண்டு மனக்குறைகள் உண்டு.
பாவாணர் தம் முதுமையை உணர்ந்து 1974 முதல் 1980-க்குள் தாம் கருதும் அனைத்துச்
சொற்களுக்குமுள்ள தம் ஆராய்ச்சிக் குறிப்பினைச் சுருக்கெழுத்தாளர் வாயிலாகப் பதிவு
செய்து வைத்திருக்க வேண்டும்; அல்லது நாடாப்பதிவில் தம் வேர்ச்சொல்
லாராய்ச்சியை அப்படியே பதிவு செய்திருக்க வேண்டும். |
அப்படிச் செய்யாமையால், பாவாணரது அரிய
உழைப்பு, வாழ்நாள் முழுவதும் அவர் செய்த ஆராய்ச்சி, எந்தச் சொல்லுக்கு எந்த வேர்,
என்ன வளர்ச்சி, என்ன வரலாறு என்றுள்ள பல குறிப்புகளையும் நாம் உணரமுடியாமல்
போய்விட்டது. |
இன்று வெளிவரும் ‘செ.சொ.பி அகரமுதலித்
தொகுப்புகள்‘ பாவாணரின் அகரமுதலிகள் அல்ல. பாவாணவர் வழியில் வெளிவரும் தொகுப்புகளே.
இன்றுள்ள ஆய்வாளர்கள் கடுமையாக உழைத்தாலும் பாவாணரின் ஆராய்ச்சிச் செல்வம் தாங்கிய
தொகுப்புகளாக அவை இல்லை என்ற மனக்குறை எனக்குண்டு. |
இந்தப் படைப்புகள் இவ்வளவு நேர்த்தியாகவும்,
சிறப்பாகவும், செம்மையாகவும் வருவதற்குத் துணைநின்ற பெருந்தகை, பெரும்புலவர் அ.நக்கீரன்
அவர்களைப் போற்றுகிறேன். |
இலக்கிய இலக்கண அறிவும், தனித்தமிழ்ப்
பற்றும், பிழையின்றி நூல் பதிப்பிக்கும் ஆற்றலும், அகரமுதலித் தொகுப்பில்
முன்பின் மாட்டேறுகளைத் தவறவிடாத நுட்பமும், உழைப்புத் திறமுங் கொண்ட இப்
பெருந்தகையின் உழைப்பு நூல் முழுதும் மிளிர்வதை என்னால் உணர முடிகிறது. |
எனினும் அந்த வழியில் பணிகளை வேகமாக
முடிக்கும் - முடுக்கிவிடும்-வாய்ப்பு எனக்குக் கிட்டியது என்பதொன்றே மனநிறைவளிப்பதாகும். |
இன்னும் சில ஆண்டுகளில் ‘செ.சொ.பி.அகரமுதலித்
திட்டம்‘ நிறைவுபெறும். அதற்கு முன்னோ, பின்னோ வரும் ஆராய்ச்சியாளர்கள்
மேலும் ஆராய்ந்து வளம் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன். |