என்பது “பெறுதரவு தரவிணையே ............கொச்சகமாம்’ எ-து, தரவொன்றே வந்தால் தரவுகொச்சகக் கலிப்பா எனவும், தரவிரண்டாய் வந்தால் தரவிணைக்கொச்சகக் கலிப்பா எனவும், சிலதாழிசை வந்தால் சிஃறாழிசைக்கொச்சகக் கலிப்பா எனவும், பலதாழிசை வந்தால் ப்ஃறாழிசைக்கொச்சகக் கலிப்பா எனவும், பலவடியு மயங்கிவந்தால் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனவும் பெயராம். “இறுதிநீண் ...... தாழிசையே” எ-து, பலவடியாய் எல்லாவடியுந் தம்முளளவொத்து ஈற்றடி நீண்டுவருவது கலித்தாழிசை. “எழில் ஐஞ்சீர்......கலித்துறை” எ-து, ஐஞ்சீரால்வரும் நாலடியையுடையது கலித்துறை. “நேரடிநான் குறுதல் கலிவிருத்தம்” எ-து, நாற்சீர் நாலடியாய் வருவது கலிவிருத்தம். இனி, வஞ்சிப்பாவுக்குவரலாறு; “இசை தூங்கலடி..... அகவலிறும் வஞ்சி” எ-து, தூங்கலோசையினையுடைத்தாய், இருசீரடியினையும் முச்சீரடியினையு முடைத்தாய்த் தனிச்சொற்பெற்று ஆசிரியச் சுரிதகத்தான் முடிவது வஞ்சிப்பா. ‘குறள்சிந்தொடு’ என்னும் விதப்பினால், குறளடிவஞ்சிப்பாவென்றும் சிந்தடிவஞ்சிப்பாவென்றும் பெயருடன் வழங்கும் என்க. “இருசீர் அறையடி......தாழிசை” எ-து இருசீர் நாலடியாய் ஒருபொருண்மேன் மூன்றடுக்கிவருவது வஞ்சித்தாழிசை. “ஆங்கவற்றொன்றாந்துறை” எ-து அந்தத்தாழிசை யொன்று தனியே வருவது வஞ்சித்துறை. “முச்சீரடி நான்காம் வஞ்சிவிருத்தம்” எ-து, முச்சீர் நாலடியாய் வருவது வஞ்சிவிருத்தம். எ-று. இவற்றுக்கு முறையே உதாரணம் வருமாறு;___ “செல்வப்போர்க்கதக்கண்ணள்.........மருமம்பாய்ந்தொளித்ததே.” இது, சுரிதகமில்லாத தரவுகொச்சகக் கலிப்பா. “குடநிலைத் தண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத் தடநிலைப் பெருந்தொழுவிற் றகையுறூஉ மரம்பாய்ந்து வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனந் தோன்றப்போய்க் கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப எனவாங்கு- ஆனொடு புல்லிய பெரும்புதன் முனையுங் கானுடைத் தவர்தேர் சென்ற வாறே”
இது தனிச்சொற்பெற்றுச் சுரிதகத்தாலிற்ற தரவு கொச்சகக்கலிப்பா. “வடிவுடை நெடுமுடு வானவர்க்கும் வெலற்கரிய கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாம் கொடிபடு வரைமாடக் கூடலார் கோமானே”-இது தரவு. |