பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 39

     உலாவென்னும் பிரபந்தம் பாடுவது; முடிபுனைந்த மன்னவருமாய்
இருபத்தொரு பிராயத்துக்கு உட்பட்டவர்களுக்கும் தேவர்களுக்கும்
உலாப்பாடலாம். அல்லாதவர்களுக்கு ஆகாது.

     (கு - ரை.) உலாவை உலாப்புறமென்றும் வழங்குவர். இங்கே
கூறப்பட்ட பிராயங்கள் வேறு நூல்களில் சிறிது மாறுபட்டும்
காணப்படுகின்றன.

     (பி - ம்.)ம்.) 1 ‘ஆதலைந் தேழ்பதி னொன்றுபன் மூன்றுபத்
தொன்பெனவே’(21)

மடல்
   
47.
பொருளறம் வீடு பழித்தின்ப 1மேபொரு ளாக்கிநல்லார்
2அருள்பெறு வேட்கை மடன்மிக வூர்தலிற்
                             3பாட்டுடையோர்க்
குரிதரு பேரிற் பெயருக் கிசைந்த எதுகையினால்
வருகலி வெண்பாத் தனைமட லாக வகுத்தனே
ர.

     (உரை I).
எ - ன், மடலாமாறுணர்த்.........................று.

     (இ - ள்.) அறம் பொருள் வீடென்னும் மூன்றையும் பழி்த்துக் காமமே
பொருளாக அரிவையர் அருள் பெறும் வேட்கையினால் மடலூர்வலென்னும்
பொருள் பாட்டுடைத் தலைமகன் இயற்பெயராகிய அந்த எதுகை வகுத்து
ஆக்கிய கலிவெண்பாவை மடலென்றுரைப்பர் வண்டமிழ்ப் புலவர் எ - று.

     (உரை II). எ - து. அறம், பொருள், வீடு என்ற மூன்று
காரியங்களையும் பழித்து, இன்பமே பொருளாக்கி, இந்த இன்பத்துக் கிடமான
சிறப்பினையும் வைத்துப் பாட்டுடைத் தலைமகன் பேருக்கிசைந்த எதுகை
[யினாலே ஏதுவாக] வைத்துக் கலிவெண்பாவினாலே, தலைமனிரந்து
குறைபெறாது மடலேறுவதாய், ஈரடி யெதுகை வரப்பாடுவது மடலென்று
சொல்லப்படும் எ - று.

     (கு - ரை). இந் நூலைப் போலவே பிரபந்தத்திரட்டும் வச்சணந்தி
மாலையும் மடல் என்றே கூறும்; சில நூல்கள் வளமடல், உலாமடல்