பக்கம் எண் :
 
18இறையனார் அகப்பொருள்

    என்னை,
        
முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
          நுவலுங் காலை முறைசிறந் தனவே
’ (அகத்திணையியல்- 3)
என்றாராகலின்.

               
ஐந்திணை முதற்பொருள்

    அவை வருமாறு:


அவற்றுள், முதல் இரண்டு வகைப்படும், நிலமும் பொழுதும் என.

    என்னை,


     ‘
முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டின்
      இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே

                                                                          (அகத்திணையியல்-4)
என்றாராகலின்.

       குறிஞ்சிக்கு நிலம், மலையும் மலைசார்ந்த இடமும்; பொழுது,
கூதிரும்யாமமும் முன்பனியும்.
 

       நெய்தற்கு நிலம், கடலும் கடல்சார்ந்த இடமும்; பொழுது எற்பாடு.


     பாலைக்கு நிலம் இல்லை.

 

         ‘நடுவண் ஐந்திணை நடுவண தொழியப்

        படுதிரை வையம் பாத்திய பண்பே’     (அகத்திணையியல்-2)

என்றார் தொல்காப்பியனார் ஆகலின்; பொழுது, நண்பகலும், வேனிலும்,
பின்பனியும். நிலம் இன்றிப் பொழுதினானே திணையாமோ எனின்,
குறிஞ்சியும் முல்லையும் அடுத்த நிலமே காலம் பற்றிப் பாலைநிலமாம்

 என்பது.


        முல்லைக்கு நிலம், காடும் காடுசார்ந்த இடமும்; பொழுது, காரும்
மாலையும்.

        மருதத்திற்கு நிலம், பழனமும் பழனஞ் சார்ந்த இடமும்; பொழுது,
வைகறை யாமம்.

   அஃது என்னை பெறுமாறு எனின்,


      ‘
மாயோன் மேய காடுறை யுலகமும்
      சேயோன் மேய மைவரை யுலகமும்
      வேந்தன் மேய தீம்புன லுலகமும்
      வருணன் மேய பெருமண லுலகமும்