பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 19
 

        'முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
        சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே.’        (அகத்-5)
        ‘காரு மாலையு முல்லை.’                     (அகத் -6)
        ‘குறிஞ்சி
        கூதிர் யாமம் என்மனார் புலவர்.’              (அகத் -7)
        ‘பனியெதிர் பருவமும் உரித்தென மொழிப.’      (அகத் -8)
        ‘வைகுறு விடியல் மருதம்.’                    (அகத் -9)
        ‘எற்பாடு
        நெய்த லாதல் மெய்பெறத் தோன்றும்’         (அகத் - 10)
        ‘நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
        முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.’     (அகத் - 11)
        ‘பின்பனி தானும் உரித்தென மொழிப’         (அகத் - 12)

       மருதத்திற்கும் நெய்தற்கும் பெரும்பொழுது சொல்லிற்றின்மையின்,
அறுவகை இருதுவும் உரிய எனக் கொள்க; இவை முதல்.

                 
 ஐந்திணைக் கருப்பொருள்

 

    இனிக், கரு என்பது தெய்வமும் உணாவும் மாவும் மரமும் புள்ளும்
பறையும் செய்தியும் யாழும் முதலாக உடையது;
 

     என்னை,
        ‘
தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
       செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ1
       அவ்வகை பிறவுங் கருவென மொழிப
’     (அகத் - 20)

என்றாராகலின். அவை அம்முறையானே சொல்லுதும்.

குறிஞ்சிக்குத்,
      
 தெய்வம் - முருகவேள்;
       உணா - ஐவன நெல்லும், திணையும்;
       மா - புலியும், பன்றியும், யானையும்;
       மரம் - அகிலும், ஆரமும், திமிசும், தேக்கும், வேங்கையும்;
       புள் - கிளியும், மயிலும்;
       பறை - வெறியாட்டுப்பறையும்,     தொண்டகப்பறையும்,
குரவைப்பறையும்,

     
  (பாடம்) 1. தொகைஇய.