பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 203
 

சூத்திரம்-57


     அவற்றுள்
     எச்சமும் கோளும் இன்மையும் உரிய.


என்பது என்னுதலிற்றோ எனின், மேற்கூறப்பட்ட பத்தினுள்ளும் எச்சமும்
கோளும் இன்றியும் உரிய என்பது உணர்த்துதல் நுதலிற்று.

    இதன் பொருள்: அவற்றுள் என்பது - மேற் கூறப்பட்ட
பத்தினுள்ளும் என்றவாறு; எச்சமும் கோளும் இன்மையும் உரிய என்பது -
எச்சமானும் கோளானும் அவ்விரண்டினுள்ளும் ஒன்றொழிந்தும் இரண்டும்
ஒழிந்தும் நிற்கவும் பெறும் என்றவாறு.

அவற்றுள், எச்சமின்றி வந்ததற்குச் செய்யுள்:

   ‘ஆமான் அனையமென் னோக்கி அழுங்க லகன்றுசென்ற
   தேமா நறுங்கண்ணி யாரையுங் காட்டுந்தென் பாழிவென்ற
   வாமா நெடுந்தேர் மணிவண்ணன் மாறன்வண் தீந்தமிழ்நர்
   கோமான் கொடிமே லிடியுரு மார்க்கின்ற கூர்ம்புயலே.’ (322)

இனிக், கோளின்றி வந்தது வருமாறு:

   ‘வாடு நிலைமையை நீக்கிமண் காத்துவல் லத்தெதிர்ந்தார்
   ஓடு நிலைமைகண் டான்வையை யொண்ணுதன் மங்கையரோ
   டாடு நிலைமையை அல்லை அவரொடம் பூம்பொழில்வாய்
   நீடு நிலையையும் அல்லைசொல் லாயென் நெடுந்தகையே’ (323)

எனக் கொள்க. (24)


சூத்திரம்-58


   சொல்லே குறிப்பே ஆயிரண் டெச்சம்.

என்பது என்னுதலிற்றோ எனின், மேற்கூறப்பட்ட எச்சம் இரண்டு வகைப்படும்
என்பது உணர்த்துதல் நுதலிற்று.

    இதன் பொருள்: சொல்லே குறிப்பே ஆயிரண்டு எச்சம் என்பது -
சால்லெச்சமும் குறிப்பெச்சமும் என இரண்டு எச்சம் ஆம் என்றவாறு.

    சொல்லெச்சம் என்று சொல்லப்பட்ட வாய்பாடின்றிப் பிறவாய்பாட்டால்
தோன்றினும் என்றவாறு.

எச்சம் என்பது ஒழிதல் என்றவாறு.