தோழி பக்கல்நின்ற குறையுறவினானாய கூட்டம் தலைமகட்கு
இல்லை என்றவாறு. அஃதியாங்ஙனமோ
1எனின், ‘இங்கு வந்து
ஒழுகாநின்றான் ஒரு தோன்றல் உளன், அவன் என்னினாயதோர்
குறையுடையான்போலும்,
அக் குறை இன்றியமையான்; அக் குறை
முடித்தருளாயாயின் என்னைக் குற்றேவல் இழத்தி’ என,
2அவ்
விழப்பிற்கஞ்சிக் குறைநேர்ந்து, தலைமகள் தலைமகனை ஏற்றுக்கொண்டு
கூடுங் கூட்டம்
இல்லை, வழக்கினுட்போல என்பது.
‘அவ்வியல் பல்லது கூட்டக் கூடல்
எவ்விடத் தானுங் களவிற் கில்லை.’ (இறையனார்-4)
என அமையாதோ எனின், அது சொல்லிப் போந்து,
‘உள்ளத் துணர்ச்சி தெள்ளிதிற் கரந்து
கிழவோள் தேஎத்துக் குறையுறூஉம் உளவே
குறிப்பறி வுறூஉங் காலை யான’ (இறையனார்-10)
என்றது சொல்லவே, இவ்வகை தோழியாற் குறையுறப் புணரும் புணர்ச்சி
உண்டுகொல்லோ என்று
ஐயமாமென்று மேலதனையே வலியுறுத்தற்குச்
சூத்திரம் வேண்டிற்று என்பது.
இனி, ஒரு சாரார் 2சொல்லுமாறு: ‘குறையுறு புணர்ச்சி தோழி
தேஎத்துக் கிழவிக்கில்லை’ என
அமையாதோ, தலைப்பெயலான என்றது
எற்றிற்கோ எனின், தோழியிற் கூட்டந்தான், தலை இடை
கடை என, மூன்று
வகைப்படும். அவற்றுள் தலைக்கண்ணே அறியநில்லாது இடையாந்தரத்தும்,
இறுதிக்
கண்ணும் எல்லாம் ‘இவள் கூட்டவே கூடுகின்றேன்’ என்பதனை
அறிந்தே கூடும். இங்ஙனம் இல்லாவிடத்து,
* * * *
‘அருள்புரி நெஞ்சமோ டெஃகு துணையாக
வந்தோன் கொடியனும் அல்லன் தந்த
நீதவ றுடையையும் அல்லை நின்வயின்
ஆனா அரும்படர் செய்த
யானே தோழி தவறுடை யேனே’ (அகம்-72)
என்னுமாறு உண்டோ என்பது. மற்றும் இப் பெற்றியே வந்தனவெல்லாங்
கொள்க. (13)
(பாடம்) 1. தலைப்பெய்தற்கு இலக்கணம். 2. அவளை
இழப்பதற்கஞ்சிக்.
|