பக்கம் எண் :

கற்பியல் சூ.9175
 

இது,  முன்பு  தலைவிக்கு  நிகழ்ந்த  ஆற்றாமையும்  அது  கண்டு  தான் கலங்கியவாறுந் தலைவற்குக்
கூறியது.
  

“மடவ மன்ற தடவு நிலைக்கொன்றை
கல்பிறங் கத்தஞ் சென்றோர் கூறிய
பருவம் வாரா வளவை நெரிதரக்
கொம்புசேர் கொடியிணரூழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே”
1

(குறுந் - 66)
  

இது, பருவம் அன்றெனப் படைத்து மொழிந்தது.
  

“எனநீ, தெருமரல்வாழி தோழிநங் காதலர்
பொருமுரண் யானையர் போர்மலைந் தெழுந்தவர்
செருமேம் பட்ட வென்றியர்
வருமென வந்தன்றவர் வாய்மொழித்தூதே”
2

(கலி - 26)
  

இது தூது வந்தமை தலைவிக்குக் கூறியது.
  

“கைவல் சீறியாழ்ப் பாண நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே
யெம்மி னுணரா ராயினுந் தம்வயிற்
பொய்படு கிளவி நாணலும்
எய்யா ராகுத னோகோ யானே”
3

(ஐங்குறு - 472)
  

இது, குறித்த பருவத்துத் தலைவன் வாராதவழித் தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது.  


1. பொருள்:  கற்பாறை விளங்கும்  வழியிற்  சென்ற  காதலர் தாம் மீண்டும் வருவதாகக் கூறிய கார்ப்
பருவம் வாராத போதே புதியதாக  வந்த  மேகத்தைக்  கண்டு கொன்றை மரமானவை கிளைகளைச்
சேர்ந்து கொடியாக மலர்களை விரித்தன. அதனால் அவை மிகவும் மடப்பத்தையுடையனவாம்.
  

2. பொருள்: தோழி!    நம்  காதலர் போர் பொரும் வலியுடைய யானையது போரில் சண்டை செய்து
அவர்களது போரில் மேம்பட்ட  வென்றியுடையராய்  வருவர்  எனச்  சொல்லி வந்தது அவர் வாய்
மொழித்தூது. அதனால் நீ வருந்தாதே! வாழி.
  

3. பொருள்: கையால்   இயக்குதலில்   வல்ல சிறிய யாழுடைய பாணனே! நம்மவர் குறித்துச் சொன்ன
பருவம்வந்து விட்டது. அவர் வந்திலர்.   எம்மை  நினைந்து வாராராயினும் தம்மிடத்துப் பொய்படும்
சொல் உண்டாதற்கு நாணவும் அறியாதவராகுதலுக்காகயான் மிக வருந்துவேன்.