பக்கம் எண் :

174தொல்காப்பியம் - உரைவளம்
 

இது, தலைவிக்கு வரவு மலிந்தது.
  

“நீலத்தன்ன நீர்பொதி கருவின்
அமர்விசும் பதிர முழங்கியாலியின்
நிலந்தண்ணென்று கானங்குழைப்ப
வினந்தே ருழவரின் குரலியம்ப
மறியுடை மடப்பிணை தழீஇப் புறவிற்
றிரிமருப்பிரலை பைம்பயிருகள
வார்பெயலுதவிய கார்செய் காலை
நூனெறி நுணங்கிய கானவில்புரவி
கல்லெனக் கறங்குமணி யியம்ப வல்லோன்
வாய்ச் செலவணக்கிய தாப்பரிநெடுந்தே
ரீரிய புறவினியங்குவழி மறப்பத்
தீந்தொடைப் பையுணல் யாழ்செவ்வழி பிறப்ப
விந்நிலை வாராராயிற்றந்நிலை
யெவன் கொல்பாண வுணரத்தி சிற்சிறிதெனக்
கடவுட்கற்பின் மடவோள்கூறச்
செய்வினை யழிந்தமைய னெஞ்சிற்
றுனிகொள் பருவரறீரவந்தோ
யினிது செய்தனையால் வாழ்கநின் கண்ணி
வேலி சுற்றிய வால்வீ முல்லைப்
பெருங்கார் கமழும் விரிந்தொலிகதுப்பி
னின்னகை யிளையோள் கவவ
மன்னுக பெருமநின் மலர்ந்த மார்பே”
1  

(அகம் - 314)


கேட்குந்  தோறும் அவனிடத்து  அவாக்கொள்ளும்  மனத்தேமாகிய நமக்குமகிழ்ச்சியுண்டாகும்படி
நம்மிடம் வந்து சேர்ந்தார்.
 

1. பொருள்:  நீலமணி  போலச்  சூல்கொண்டு  ஆகாயம்  அதிர  முழங்கி,  நீரால்  நிலம்  குளிர்ந்து
காடுதழைப்ப, உழவர்  ஆர்ப்பரிக்க  பிணையினைத்  தழுவி இரலைமான் பயிரில் துள்ள மேகம் மிக்க
மழையைத் தந்த கார்  காலத்தே,  பாணனே!  புரவியின் மணி ஒலிக்க பாகன் வாவிச் செல்ல அடக்கி
விடப்படும் விரையும்   நெடிய  தேர்ச்  சக்கரம்  ஈரமான  வழியை  அறுக்க,  யாழ்  செவ்வழியிசை
தோற்றுவிக்க இந்த நிலையில்  அவர்  வாரா  ராயின்  அவர் நிலை என்னாம்? சிறிதே கூறுக என்று
கற்புடைய தலைவி கூறச்  செய்யும்   தொழிலில்  மனம்  கழிந்த மயக்கம் அவட்குத்தீருமாறு தலைவ!
வந்தாய், நன்றே செய்தாய். வாழ்க  நின்   கண்ணி. கூந்தலும் இனிய நகையும் இளமையும் உடையாள்
தழுவ நின் மார்பு மன்னுக.